விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புதிய டி20 போட்டியில் விளையாடும் டெண்டுல்கர், லாரா!

2015-க்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் மைதானத்துக்குள் களமிறங்கவுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

News image
Updated On :16 அக்டோபர் 2019, 10:01 am

2015-க்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் மைதானத்துக்குள் களமிறங்கவுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் மட்டுமல்ல, லாரா, சேவாக், முரளிதரன் என பிரபல முன்னாள் வீரர்கள் பலரும் ஒன்றிணைந்து டி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார்கள். 

சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் டி20 போட்டி, அடுத்த வருடம் பிப்ரவரி 2 முதல் 16 வரை மும்பையில் நடைபெறவுள்ளது. சச்சின், லாரா, முரளிதரன், காலிஸ், பிரெட் லீ, சந்தர்பால் என முன்னாள் வீரர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். ஓய்வு பெற்ற 110 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இந்தியா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், மே.இ. தீவுகள் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மஹாராஷ்டிர அரசின் சாலைப் பாதுகாப்பு அமைப்பும் புரொபஷனல் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. இந்தியா முழுக்க அடுத்தப் பத்து வருடங்களுக்கு இப்போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பிசிசிஐயின் அனுமதியும் கிடைத்துள்ளது. 

2013-ல் ஓய்வு பெற்ற சச்சின், 2014-ல் லார்ட்ஸிலும் 2015-ல் அமெரிக்காவிலும் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டங்களில் கலந்துகொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.