ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இருபது  வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்:  இந்திய வீராங்கனையின் அட்டகாச சாதனை! 

இருபது  வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் விளையாடும் ஒரே பெண் என்ற சாதனையை   இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் புதனன்று நிகழ்த்தியுள்ளார்.

News image

மிதாலி ராஜ்

Updated On :9 அக்டோபர் 2019, 11:35 am

வதோதரா: இருபது  வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் விளையாடும் ஒரே பெண் என்ற சாதனையை   இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் புதனன்று நிகழ்த்தியுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். இவர் கடந்த 26.06.1999 அன்று ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

தற்போது தென் ஆபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் புதனன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக களமிறங்கிய போது அவர் தனது ஒரு நாள் போட்டி வரலாற்றில் 20 ஆண்டுகள் 150 நாட்களை நிறைவு செய்தார். அத்துடன்   அவர் இந்த போட்டியில் அவுட் ஆகாமல் 11 ரணங்களை எடுத்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அதேசமயம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரு தசாப்தங்களைத் தாண்டி விளையாடி வரும் ஒரே பெண்ணும் இவர் மட்டும்தான். முன்னதாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகள் (204) விளையாடியவர் என்ற சாதனையும் இவர் வசம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.