பஞ்சாப் ஐபிஎல் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல்!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் அந்த அணியின் கேப்டனாக முரளி விஜய் இருந்தார். முதலில் மில்லர் கேப்டனாக இருந்தா. பிறகு பாதியில் அந்த வாய்ப்பு விஜய்க்குக் கிடைத்தது. இருப்பினும் கடந்த ஐபிஎல்-லில் பஞ்சாப் அணி கடைசி இடத்தையே பிடித்தது. இதையடுத்து தற்போது அந்த அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணியில் மார்கன், டேரன் சாமி, ஆம்லா ஆகியோர் இருந்தும் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த ஐபிஎல்-லில் மூன்று ஆஸி. வீரர்கள் கேப்டனாக உள்ளார்கள். பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல்லும் புணே அணிக்கும் ஸ்மித்தும் ஹைதராபாத் அணிக்கு வார்னரும் கேப்டனாக உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...