வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஸ்மித்துக்குத் தண்டனையில்லையா?: ஐசிசி மீது கவாஸ்கர் சாடல்!

கோலி, ஸ்மித் ஆகிய இருவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் கிடையாது என ஐசிசி கூறியுள்ளது...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:11 am

எழில்

நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் மூலம் மேல்முறையீடு செய்வது தொடர்பாக "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்தவர்களை ஆஸ்ரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அணுகியது தொடர்பாக கோலி, ஸ்மித் ஆகிய இருவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் கிடையாது என ஐசிசி கூறியுள்ளது. இதற்கு இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. அதில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 2-ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் மூலம் மேல்முறையீடு செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து எதிர்முனையில் நின்ற ஹேண்ட்ஸ்காம்பிடம் ஆலோசித்த ஸ்மித், திடீரென  "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த பயிற்சியாளர் லீமான் மற்றும் சகவீரர்களிடம் சைகை மூலம் ஆலோசனை கேட்டார். 

இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, நடுவரிடம் புகார் செய்தார். இதையடுத்து ஸ்மித்தை எச்சரித்த நடுவர்கள், அவரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டனர். போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி, ஸ்மித் மீது கடுமையாக சாடினார். ஆனால் ஸ்மித்தோ, குழப்பமான மனநிலையில் அதுபோன்ற தவறை செய்துவிட்டேன் என கூறினார். எனினும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை.

டிஆர்எஸ் விவகாரத்தில் கோலி-ஸ்மித் இடையிலான மோதல் தொடர்பாக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது என ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் கோலி, ஸ்மித் இடையிலான மோதல் தொடர்பான சூழலை ஆராய்ந்த பிறகே அவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தோம் என ஐசிசி கூறியுள்ளது.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஐசிசி ஒரு நாட்டுக்கு ஆதரவாக நடந்துகொள்ளக் கூடாது. ஸ்மித் செய்ததை இந்திய வீரர் செய்தாலும் நடவடிக்கை எடுக்கக்கூடாது. 

3-வது டெஸ்ட் போட்டியில் தனக்கு அவுட் கொடுக்கும்போது ஓய்வறையை நோக்கிப் பார்த்து விராட் கோலி உதவி கோரவேண்டும் என நான் விரும்புகிறேன். விராட் கோலி அப்படிக் கேட்கும்போது ஐசிசி என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கவேண்டும். ஸ்மித்தின் நடவடிக்கையை ஐசிசியின் விதிமுறைகளை மீறிய ஒன்றாக ஐசிசி நடுவர் கிறிஸ் பிராட் பார்க்கவில்லை. தற்போது ஐசிசியின் நிலைப்பாடு பிசிசிஐ, கோலியை அவமதிப்பதாகவே உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.