வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கோலியின் குற்றச்சாட்டுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா கண்டனம்!

நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் விராட் கோலி குற்றம் சுமத்துவது கொடுமையானது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:10 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இதன்மூலம், புணே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியிடம் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டதற்குப் பழி தீர்த்துக்கொண்டது இந்திய அணி. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் தற்போது சமன் செய்துள்ளது இந்திய அணி.

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், இந்தியாவின் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார். அதை எதிர்த்து டிஆர்எஸ் (நடுவர் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு) அடிப்படையில் முறையீடு செய்வதா? வேண்டாமா என்று யோசித்த ஸ்மித், அதுகுறித்து கருத்தறியும் வகையில் பெவிலியனில் ஆஸ்திரேலிய வீரர்கள் அமர்ந்துள்ள பகுதியை பார்த்துக் கொண்டிருந்தார். ஏனெனில், ஆஸ்திரேலியாவின் வசம் அப்போது ஒரே ஒரு டிஆர்எஸ் வாய்ப்பு தான் இருந்தது. விதிகளின்படி, ஓய்வு அறை பகுதியில் இருந்து கருத்துகள் கேட்கப்படக் கூடாது. 15 விநாடிகளுக்குள்ளாக களத்திலேயே அந்த முடிவை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், ஸ்மித் செயலை கண்ட போட்டி நடுவர்கள் அவரை அவ்வாறு செயல்படவிடாமல் தடுத்தனர். எனினும், இதைக் கண்டுகொண்ட இந்திய கேப்டன் கோலி, ஸ்மித்துடன் சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஸ்மித்தின் டிஆர்எஸ் சர்ச்சை குறித்து பேசுகையில், "சிந்திக்காமல் அவ்வாறு செயல்பட்டதாக ஸ்மித் கூறியுள்ளார். ஆனால், 2 முறைக்கும் மேலாக ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வாறு செயல்படுவதை பார்த்திருக்கிறேன். அந்த வகையில், அவர்கள் சிந்திக்காமல் செயல்படுவதாகத் தெரியவில்லை' என்றார் கோலி.

கோலியின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை அதிகாரியான ஜேம்ஸ் சுதர்லேண்ட் இதுகுறித்து கூறும்போது: ஆஸ்திரேலிய அணி வீரர்கள், ஸ்மித் ஆகியோரின் நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் விராட் கோலி குற்றம் சுமத்துவது கொடுமையானது. ஸ்மித் இளம் வீரர்களுக்கு ஆதர்சமாக விளங்குபவர். அவருடைய செயல்களில் எந்தவொரு தவறான எண்ணமும் இல்லை. நாட்டுக்காக விளையாடும் ஸ்மித் மற்றும் எங்கள் கிரிக்கெட் வீரர்களின் பின்னால் நிற்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.