பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இணைந்த கைகள்: ஐசிசி தரவரிசையில் அஸ்வின், ஜடேஜா முதலிடம்!

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும்...

News image
Updated On :8 மார்ச் 2017, 6:56 am

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் அஸ்வின் முதலிடத்திலும் ஜடேஜா இரண்டாம் இடத்திலும் இருந்தார்கள். பெங்களூர் டெஸ்டுக்குப் பிறகு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசைப்பட்டியலில் ஜடேஜாவும் அஸ்வினுடன் இணைந்து முதலிடம் பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் முதலிடம் வகிப்பது இதுவே முதல்முறை. ஜடேஜா முதல்முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.  

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியில் இரு நெ.1 பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளார்கள். 

பேட்டிங்கில் விராட் கோலி மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ளார். ஆஸி. கேப்டன் ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார். 

அதேபோல ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார். வங்கதேசத்தின் சகிப் அல் ஹசன் முதலிடம் பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.