2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

டெஸ்ட்: நிலைத்து நின்ற புஜாரா - ரஹானே! மீண்டு வந்த இந்தியா!

5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா - ரஹானே அற்புதமாக விளையாடி இந்திய அணிக்குச் சாதகமான சூழலை..

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:09 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் முன்னிலை பெறுவதற்காகக் கடும் முயற்சி செய்துவருகிறது. 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா - ரஹானே அற்புதமாக விளையாடி இந்திய அணிக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளார்கள். 

பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டது.  2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 106 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது. மேத்யூ வேட் 25, மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் சில ஓவர்கள் கழித்து ஸ்டார்க்கின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். அவர் 26 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு 121-வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் வேட் (40), லயன் (0) ஆகியோரை வீழ்த்தினார். ஹேஸில்வுட் அடுத்தப் பந்தைச் சரியாக ஆடி ஜடேஜாவின் ஹாட்ரிக் முயற்சியைத் தடுத்தார். லயனின் விக்கெட் ஜடேஜாவின் 5-வது விக்கெட் ஆகும். இந்த இன்னிங்ஸில் மற்ற பந்துவீச்சாளர்களை விடவும் குறைவான ஓவர்கள் வீசிய ஜடேஜா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பிறகு கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. ஹேஸில்வுட் 1 ரன்னில் வீழ்ந்தார். ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து அந்த அணி முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியத் தரப்பில் ஜடேஜா 63 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட்டுகள், இஷாந்த், உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.

இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது. ராகுல் 20, முகுந்த் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட முதல் ஓவரிலேயே 16 ரன்களில் ஹேஸில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார் முகுந்த். அற்புதமான பந்துவீச்சினால் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து நெருக்கடி அளித்தாலும் தொடக்க வீரர் ராகுல் பிரமாதமாக விளையாடினார். 82 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இந்த ஆடுகளத்தில் வேறு யாரை விடவும் திறனாக விளையாடியவர் ராகுல் மட்டுமே. அவரால் அதிகப் பந்துகளை வீணடிக்காமல் ஆடமுடிந்தது. ஆனால் ஸ்மித்தின் அற்புதமான கேட்சினால் 51 ரன்களில் வெளியேறினார் ராகுல். ஓரளவு நம்பிக்கையுடன் விளையாடிய கோலி, ஹேஸிவுட்டின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் 15 ரன்களில் வீழ்ந்தார். இதன்பிறகு ரஹானேவுக்குப் பதிலாக ஜடேஜா களமிறங்கினார். இந்த இந்த வித்தியாசமான முயற்சி பலன் அளிக்கவில்லை. ஜடேஜா 2 ரன்களில் வெளியேறினார். இவருடைய விக்கெட்டையும் ஹேஸில்வுட் வீழ்த்தினார். 

3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. புஜாரா 34, ரஹானே 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இதன்பிறகு தொடர்ந்து துல்லியமான பந்துவீச்சின் மூலம் கடுமையான நெருக்கடி அளித்தார்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள். ஆனால் கவனமாக விளையாடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினார்கள் இருவரும். திறமையான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியால் ஆஸி. அணியால் இந்த ஜோடியைப் பிரிக்கமுடியாமல் போனது. புஜாரா 125 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

3-வது நாளின் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. இன்னமும் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 126 ரன்கள்  முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாராவும் ரஹானேவும் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் சேர்த்துள்ளார்கள். புஜாரா 70, ரஹானே 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இந்திய அணி தோல்வி பெறுகிற நிலையிலிருந்து இன்று தனக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இந்திய அணி 250 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்டால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது கூட சாத்தியமாகிவிடும். இந்த நிலையில் மிகவும் சுவாரசியமான முடிவை நோக்கிச் செல்கிறது பெங்களூர் டெஸ்ட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.