வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

எப்போதோ யாருக்கோ சொன்னது இப்போது வைரலாகிறது!

நியூ ஸிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவரின் எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது.

News image

வினெஷ் போகத்

Updated On :7 ஆகஸ்ட் 2024, 10:40 am

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நியூ ஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் எக்ஸ் பதிவு தற்போது வைரலாகியிருக்கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது நியூ ஸிலாந்து அணி தோல்வியடைந்த நிலையில், ஜிம்மி நீஷம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மேற்கொண்டிருந்தததுதான் அந்தப் பதிவு.

அதில் அப்படி என்ன சொல்லியிருந்தாரோ, அது இப்போது படிக்கும்போது, இந்திய ரசிகர்களுக்கு சொல்லப்படுவதுபோலவே உள்ளது.

Story image

அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், குழந்தைகளே, விளையாட்டில் ஈடுபட வேண்டாம், கேக் செய்வது அல்லது வேறு எந்த வேலையையும் எடுத்துக்கொள்ளுங்கள். நன்கு உடல் கொழுத்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து 60 வயதில் இறந்துவிடலாம் என்று பதிவிட்டிருந்தார்.

2019ஆம் ஆண்டு அவர் பதிவிட்டிருந்ததை, சமூக வலைதளங்களில் மக்கள் தற்போது தேடிப்பிடித்து வைரலாக்கி வருகிறார்கள்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், மகளிருக்கான மல்யுத்தத்தில், 100 கிராம் உடல் எடை கூடுதலாக இருந்ததற்காக, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, இந்தியர்களின் இதயங்களில் பேரடி தாக்கிய நிலையில்தான் இது வைரலாகியிருக்கிறது.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் களம்கண்ட வினேஷ் போகத், செவ்வாய் இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்துள்ளார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மல்யுத்தப் போட்டியின் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கியூபாவின் கஸ்மன் லோபஸ் யுஸ்னெலிஸை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்று, சாதனை படைத்திருந்தார்.

50 கிலோ எடைப்பிரிவில் விளையாட வேண்டிய வினேஷ் போகத், செவ்வாய்க்கிழமை இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விளையாட வேண்டிய நாள்களில், அவர் 50 கிலோவுக்கு கூடுதல் எடையுடன் இருக்கக் கூடாது என்பது விளையாட்டு விதிமுறை.

எனவே, செவ்வாய்க்கிழமை இரவு முதல் வினேஷ் போகத், தொடர் ஓட்டம், ஸ்கிப்பிங், சைக்கிளிங் என அனைத்துக் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

தொடர் பயிற்சியால் ஒரே இரவில் 1.85 கிலோ எடையைக் குறைத்த அவரால் 100 கிராமை குறைக்க முடியாமல் போயிருக்கிறது. அவரால் குறைக்க முடியாமல் போன அந்த 100 கிராம் உடல் எடையானது, அவரை இன்று ஒலிம்பிக் பதக்கம் எனும் கனவை நனவாக்க விடாமல் தடுத்து, தகுதி நீக்கம் செய்யக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்திய ஒலிம்பிக் குழு சார்பில், வினேஷ் போகத் தனது உடல் எடையைக் குறைக்க சற்று நேரம் கேட்டும், அது பாரீஸ் ஒலிம்பிக் அமைப்பினால் மறுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.