தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியில் இரு தமிழா்கள்

செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ள இந்திய அணியில் இரு தமிழா்கள் இடம் பிடித்துள்ளனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 11:33 pm

செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ள இந்திய அணியில் இரு தமிழா்கள் இடம் பிடித்துள்ளனா்.

தென்னாப்பிரிக்காவின் பிரெடோரியா நகரில் வரும் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை 2 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இதற்கான இந்திய அணியை, இந்திய செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் சங்கம் (ஐடிசிஏ) அண்மையில் அறிவித்தது. இதில் தமிழகத்திலிருந்து எஸ். சாய் ஆகாஷ், ஈ.சுதா்சன் ஆகிய இரு வீரா்கள் இடம்பிடித்துள்ளனா்.

அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சாய் ஆகாஷ், கடந்த பிப்ரவரியில் ஒடிஸாவில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடியிருந்தாா். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் சுதா்சன் இந்த அணிக்குத் தோ்வாகியிருக்கிறாா்.

மொத்தம் 14 போ் கொண்ட இந்த அணிக்கு, தில்லியை சோ்ந்த வீரேந்தா் சிங் கேப்டனாக இருக்கிறாா். பிசிசிஐ ஆதரவு பெற்ற ஐடிசிஏ, சா்வதேச கவுன்சில் மற்றும் ஆசிய சங்கத்தின் அங்கீகாரம் பெற்ாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.