திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

சிஎஸ்கேவின் இளம் வீரர் சமீர் ரிஸ்விக்கு பேட்டிங் அறிவுரை வழங்கிய தோனியின் விடியோ வைரலாகி வருகிறது.

News image

சிஎஸ்கேவின் இளம் வீரர் சமீர் ரிஸ்விக்கு பேட்டிங் அறிவுரை வழங்கிய தோனி. - படங்கள்: சிஎஸ்கே / எக்ஸ்

Updated On :1 மே 2024, 9:59 am

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளம் வீரர் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

அதிரடியான பேட்டிங் மற்றும் ஸ்பின் பௌலிங் என ஆல்ரவுண்டருக்கான திறமைசாலியான இவர் உ.பி.டி20 லீக்கில் 9 போட்டிகளில் 455 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். மேலும், இந்தத் தொடரிலேயே அதிக சிக்ஸர்கள் (35), அதிவேக சதமடித்த வீரருமாக கவனிக்கப்பட்டார்.

சில போட்டிகளில் மட்டுமே பேட்டிங் வாய்ப்பு கிடைத்த சமீர் ரிஸ்வி தான் ஆடிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். ஒரு போட்டியில் மட்டுமே நன்றாக விளையாடினார். மற்ற போட்டிகளில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

தற்போது ரஹானே சரியாக விளையாடாமல் இருக்கிறார். அதனால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தோனி சமீர் ரிஸ்விக்கு பேட்டிங் டிப்ஸ் வழங்கிய விடியோவை சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இந்த விடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு சிஎஸ்கே- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.