ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் பிரப்சிம்ரன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இம்பாக்ட் வீரர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி, ஒரு அணி பிளேயிங் லெவனில் உள்ள எந்த ஒரு வீரருக்குப் பதிலாகவும் ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்ட 5 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் எந்த நேரத்திலும் களமிறக்கலாம்.
இந்த இம்பாக்ட் வீரர் விதிக்கு எதிராக ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் பேசியுள்ளனர். இம்பாக்ட் வீரர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதற்கு இடையூறாக இருக்கும் என ரோஹித் சர்மா விமர்சித்திருந்தார். இம்பாக்ட் வீரர் விதி தனிப்பட்ட முறையில் தனக்குப் பிடிக்கவில்லை என அக்ஷர் படேலும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி தங்களது திறமையை வெளிக்காட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளங்குவதற்கு இளம் வீரர்களுக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு இளம் வீரராக ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதியை இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக ஜொலிக்க கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பாக பார்க்கிறேன். இதனை பலமுறை கூறியுள்ளேன். பலருக்கும் இந்த இம்பாக்ட் வீரர் விதி பிடிக்காது. ஆனால், இளம் வீரர்களுக்கு இந்த விதி மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நான் 8 ஆண்டுகள் செலவிட்டுள்ளேன். அதில் நான்கு ஆண்டுகளில் எனக்கு அதிக அளவில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், இம்பாக்ட் வீரர் விதியினால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அதிகரித்துள்ளது என்றார்.
Summary
Punjab Kings player Prabhsimran Singh has stated that the 'Impact Player' rule in the IPL is a massive opportunity for young players.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!

இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!

இம்பாக்ட் பிளேயர் விதி நீடிக்குமா? ஐபிஎல் கேப்டன்களுடன் பிசிசிஐ ஆலோசனை!

இம்பாக்ட் வீரர் விதி எனக்கு பிடிக்கவில்லை: அக்ஷர் படேல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



