டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிஎஸ்கே அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற வேண்டுமா?: இதர அணிகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்!

இதர அணிகள் என்ன செய்தால் சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பாதிக்காது...

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:42 pm

எழில்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி.

இதனால் சிஎஸ்கே அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியுமா என ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

அதற்குள் கவலைப்படவேண்டியதில்லை ரசிகர்களே!

சிஎஸ்கே அணி இன்னும் போட்டியிலிருந்து வெளியேறவில்லை. மற்ற அணிகள் போல பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் சிஎஸ்கேவும் உள்ளது. இதற்கு மற்ற அணிகளும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும். 

எப்படி என்று பார்க்கலாம்.

முதல் மூன்று இடங்கள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. இதனால் அதில் கை வைக்கவேண்டாம். முதல் மூன்று இடங்களை தில்லி, ஆர்சிபி, மும்பை அணிகளுக்கு விட்டுவிடலாம். நான்காவது இடத்துக்குத்தான் சிஎஸ்கே போட்டியிடுகிறது,

சரி, போட்டியை ஆரம்பிக்கலாமா?

பிளேஆஃப்புக்குச் செல்ல ஆசைப்படும் சிஎஸ்கே அணி, முதலில் மீதமுள்ள நான்கு ஆட்டங்களையும் வெல்லவேண்டும். கைவசம் 14 புள்ளிகள் இருக்கும். அது மட்டும் சாத்தியமானால் வானம் வசப்படும். 

அப்படியே நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

முதல் மூன்று இடங்களில் உள்ள தில்லி, ஆர்சிபி, மும்பை அணிகள் வழக்கம்போல எல்லா ஆட்டங்களிலும் வெல்லவேண்டும். இந்த அணிகளுக்கிடையே நடக்கும் ஆட்டங்களின் முடிவுகளால் சிஎஸ்கேவுக்குப் பாதிப்பில்லை.

அப்படியே நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது இரு தடைகளை சிஎஸ்கே தாண்டிவிட்டது. மூன்றாவது தடை - இதர அணிகள்.

அந்த அணிகள் என்ன செய்தால் சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பாதிக்காது? பார்க்கலாம்.

இப்போது 4-ம் இடத்தில் உள்ள கொல்கத்தா அணி சிஎஸ்கேவுக்குப் பெரிய சிக்கலாக உள்ளது. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அந்த அணி கடந்த நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது. நல்லது. அடுத்த நான்கு ஆட்டங்களிலும் இதேபோல மூன்றில் தோல்வியடைந்து ஒன்றில் மட்டும் கொல்கத்தா அணி வெல்லவேண்டும். இதன்மூலம் கொல்கத்தா அணியால் 12 புள்ளிகள் மட்டுமே எடுக்கமுடியும். மீதமுள்ள நான்கு ஆட்டங்களிலும் வென்று 14 புள்ளிகளுடன் உள்ள சிஎஸ்கே அணி பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும்.

அப்படியே நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கேவுக்கு மேலே உள்ள அணிகளாக ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளன. மூன்று அணிகளும் தலா 8 புள்ளிகளைக் கொண்டுள்ளன. இவர்களில் ஒருவர் கூட 14 புள்ளிகள் பக்கம் வந்துவிடக் கூடாது. அதனால் மூன்று அணிகளும் மீதமுள்ள 4 ஆட்டங்களில் தலா 2 வெற்றிகளை மட்டுமே பெறவேண்டும். அப்போது என்ன ஆகும்? ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் வசம் 12 புள்ளிகள் தான் இருக்கும்.

அப்படியே நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

14 புள்ளிகளுடன் நான்காவது அணியாக சிஎஸ்கே பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும். 

நம்பிக்கையுடன் காத்திருப்போம் ரசிகர்களே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.