ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்து புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. பஞ்சாப் அணி ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்று பந்துவீசியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 222/4 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 73 ரன்கள், கோலி 58 ரன்கள் எடுத்தார்கள்.
இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் அதிகமுறை (44) 200-க்கும் அதிகமான ரன்களை எடுத்த அணியாக ஆர்சிபி முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக சிஎஸ்கே அணி 43 முறை 200-க்கும் அதிகமான ரன்களை எடுத்திருந்தது.
சிஎஸ்கே அணி 2 சீசன்கள் விளையாடாமலேயே இந்த சாதனையை தன்னிடம் தக்கவைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
200க்கும் அதிகமான ரன்கள் குவித்த அணிகள்
44- ஆர்சிபி (19 சீசன்களில்)
43 - சிஎஸ்கே (17 சீசன்களில்)
41 - பஞ்சாப் (19 சீசன்களில்)
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 50 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதற்கு அடுத்ததாக ஆர்சிபி அணி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Summary
RCB Breaks CSK's Record! Most 200-plus totals recorded in Men’s T20 cricket
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










