திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக செயல்படாததன் காரணம் என்ன? தலைமைப் பயிற்சியாளர் விளக்கம்!

மும்பையின் தொடர் தோல்விகள் தொடர்பாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்தது குறித்து...

News image

தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே - படம் - ஏஎன்ஐ

Updated On :11 மே 2026, 6:51 pm IST

மும்பையின் தொடர் தோல்விகள் குறித்து, நாங்கள் சீராக செயல்படவில்லை என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே 10) நடந்த இரண்டாவது போட்டியில், முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் காரணமாக, மும்பை அணி விளையாடிய 11 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றது. இந்த நிலையில், மும்பை அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

இதுகுறித்து பேசிய ஜெயவர்தனே தெரிவித்ததாவது:

”இந்த சீசன் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் போதுமான அளவு சீராகச் செயல்படவில்லை. அதுவே எங்களுடைய தோல்விகளுக்கான காரணம்.

உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், எங்களுடைய வீரர்கள் சிலர் காயமடைந்தனர். மேலும், சில வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

எங்கள் முக்கிய வீரர்கள் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து களத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், காரணங்கள் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் ஒரு தரமான அணி இருந்தது என்றே நான் நினைக்கிறேன். எனவே, ஒட்டுமொத்தமாக நாங்கள் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை என்பதுதான் பிரச்னை” எனத் தெரிவித்தார்.

Summary

Regarding Mumbai's string of defeats, the team's head coach, Jayawardene, has stated that they have not performed consistently.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.