ரிஷப் பந்த் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம், லக்னௌ அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட குறைந்துவிட்டது.
இந்த நிலையில், ரிஷப் பந்த் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: அதிக கோடிக்கு ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்பட்டதால், தான் சரியாக விளையாடவில்லை என்ற அழுத்தத்தில் அவர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அணியின் கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமானது. அவர் அணிக்காக நிறைய அழுத்தங்களை எடுத்துக் கொள்கிறார். ஆனால், அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என அவர் கடுமையாக உழைக்கிறார் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Lucknow Super Giants head coach Justin Langer has stated that Rishabh Pant is under immense pressure.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











