மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேனா? டி20 கேப்டன் சூர்யகுமார் பதில்!

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் போனது ஏன் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியிருப்பதாவது...

News image

டெஸ்ட் சீருடையில் சூர்யகுமார் யாதவ். - படம்: எக்ஸ் / சூர்யகுமார் யாதவ்.

Updated On :16 மார்ச் 2026, 12:02 pm

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் போனது ஏன் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் (35 வயது) டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லாமல் இருக்கிறார். கிடைத்த வாய்ப்புகளில் மோசமாக விளையாடியதால் அவரால் மீண்டும் அந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்தப் போட்டியில் சூர்யா 18 ரன்கள் எடுத்திருந்தார்.

டெஸ்ட்டில் அதே ஆண்டு ஒரு இன்னிங்ஸில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்றதுக்குப் பிறகு பிடிஐக்கு அளித்த நேர்காணில் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:

டெஸ்ட்டில் ஒரே இன்னிங்ஸ் மட்டுமே. வாழ்க்கையில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் கிடைக்கும். நான் சிவப்பு (டெஸ்ட் கிரிக்கெட்) பந்தில்தான் கிரிக்கெட்டையே தொடங்கினேன். 10-12 ஆண்டுகள் ரஞ்சி கோப்பையில் விளையாடி இருக்கிறேன். மும்பையில் சிவப்பு பந்து கிரிக்கெட்டைச் சுற்றிதான் எல்லாமே இருக்கிறது.

வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடியதும் என்னுடைய ஆர்வம் அதன்பக்கம் சென்றுவிட்டது. அப்படிதான் டி20 கிரிக்கெட் பக்கம் வந்தேன். இருந்தும் ஒருநாள் கிரிக்கெட்டில் எவ்வளவோ முயற்சித்தும் அதில் சரியாக விளையாட முடியவில்லை. டி20 எனக்கு ஒத்துப்போனது மாதிரி எதுவும் அமையாமல் சென்றது.

2011- 2020 வரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி இருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்.

ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று விதமாகவும் விளையாட வேண்டும். விக்கெட் விழுந்தால் டெஸ்ட் கிரிக்கெட் போலவும் கடைசி நேரத்தில் டி20 கிரிக்கெட் போலவும் விளையாட வேண்டும். அதனால், எனக்கு இந்த ஒருநாள் போட்டிக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னால் முடிந்ததை முயற்சிதும் சவாலானதாக அமைந்துவிட்டது என்றார்.

Summary

Would love to play Test but T20 mein \haath set hai\, says skipper Surya.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.