திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆர்சிபி ரசிகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! டி.கே. சிவக்குமார் விமர்சனம்!

ஆர்சிபி ரசிகர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக டி.கே. சிவக்குமார் விமர்சித்திருப்பது பற்றி...

News image

விராட் கோலியுடன் டி.கே. சிவக்குமார் (கோப்புப்படம்) - ANI

Updated On :1 ஜூன் 2026, 12:18 pm IST

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த வெற்றியை கர்நாடகம் முழுவதும் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பெங்களூரு ரசிகர்கள் தங்கள் சொந்த மண்ணில் இந்த வெற்றியை நேரில் காண முடியாமல் போனது குறித்து டி.கே. சிவக்குமார் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

”இறுதிப் போட்டி பெங்களூருவில்தான் நடைபெற்றிருந்திருக்க வேண்டும். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களால், அவர்கள் வேறொரு இடத்தில் போட்டியை நடத்தியிருக்கிறார்கள். இது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை” என்றார்.

தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டி.கே. சிவக்குமார்,

“தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி ஆர்சிபி வரலாறு படைத்துள்ளது. மன உறுதி, நிதானம் மற்றும் உண்மையான வெற்றியாளர்களுக்குரிய வலிமையுடன் மீண்டும் ஒருமுறை பெங்களூருவைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.

அணியின் வீரர்கள், உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

பெங்களூரு மாநகரில் கடந்த ஆண்டில், ஜூன் 4-இல் நடைபெற்ற ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.

இந்த விபரீதத்தை கருத்தில்கொண்டு, அதைப்போன்றதொரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) பொது இடங்களிலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் எல்இடி திரைகள் அமைத்து ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரலையில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Injustice to RCB Fans! D.K. Shivakumar Criticizes!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.