தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்

News image

ஆயுஷ் ஷெட்டி - ayush shetty insta

Updated On :4 ஜூன் 2026, 5:17 am IST

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 8-21, 22-20, 21-15 என்ற கேம்களில், சீனாவின் வெங் ஹாங் யாங்கை தோற்கடித்தார்.

கலப்பு இரட்டையரில், ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஜோடி 21-14, 21-14 என்ற நேர் கேம்களில், சீன தைபேவின் யாங் போ சுவான்/ஹு லிங் ஃபாங் இணையை வீழ்த்தியது.

இதர இந்தியர்கள் தங்கள் பிரிவில் தோல்வி கண்டனர். ஹெச்.எஸ். பிரணய் 17-21, 21-16, 19-21 என்ற கணக்கில், அயர்லாந்தின் நாட் குயெனிடம் தோல்வியுற்றார்.

போட்டித்தரவரிசையில் 4}ஆம் இடத்திலிருந்த சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, மலேசியாவின் காங் காய் ஜிங்/ஆரோன் டாய் இணையை எதிர்கொண்டது. இந்திய இணை 6-11 என பின்தங்கியிருந்தபோது, சாத்விக் தோளில் வலி ஏற்பட, இந்திய ஜோடி போட்டியிலிருந்து விலகியது.

உன்னதி ஹூடா 15-21, 14-21 என, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வியைத் தழுவினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.