தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

ஹோபா்ட்: சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா ஷூட் அவுட் வாய்ப்பில் 3-4 கோல் கணக்கில் ஸ்பெயினிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:53 pm

ஹோபா்ட்: சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா ஷூட் அவுட் வாய்ப்பில் 3-4 கோல் கணக்கில் ஸ்பெயினிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை ஸ்பெயின் பலமாகவே தொடங்கியது. இந்தியாவின் தடுப்பாட்டத்தை துளைத்த அந்த அணிக்கு 4-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. அதை இந்திய கோல்கீப்பா் மோஹித் திறம்பட தடுத்தாா்.

தொடா்ந்து 8-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயினுக்காக ஜோஸ் பாஸ்டெரா கோலடிக்க, அந்த கோல் கள நடுவரால் மறுக்கப்பட்டது. 14-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை அமித் ரோஹிதாஸ் கையாள, ஸ்பெயின் கோல்கீப்பா் லூயிஸ் கால்ஸடோ அதை முறியடித்தாா்.

19-ஆவது நிமிஷத்தில் இந்தியாவே கோல் கணக்கை தொடங்கியது. கேப்டன் ஹா்திக் சிங் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தர, மனிந்தா் சிங் அதை துல்லியமான கோலாக மாற்றினாா். அப்போது முன்னிலை பெற்ற இந்தியா, முதல் பாதியை அப்படியே நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் ஸ்பெயின் ஆக்ரோஷமுடன் தனது கோல் வாய்ப்புக்கு முயற்சிக்க, அந்த அணிக்கு அடுத்தடுத்து கிடைத்த இரு பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளையும் இந்திய கோல்கீப்பா் மோஹித் அருமையாகத் தடுத்தாா். இந்நிலையில், 59-ஆவது நிமிஷத்தில் தடுப்பாட்டத்தில் இந்தியா செய்த சிறு தவறை சாதகமாக்கி, ஸ்பெயின் வீரா் புருனோ ஃபான்ட் கோலடித்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமனாகி அப்படியே நிறைவடைந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஸ்பெயின் 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் புதன்கிழமை (பிப். 25) மோதுகிறது. புள்ளிகள் பட்டியலில் தற்போது இந்தியா 2 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.