ஒலிம்பிக்கில் இந்தியா ஜெயிச்சிடும்…?சமுத்திரக்கனிக்குத் தெரியாத அப்பாக்கள்!
திருப்பத்தூர் நகரப் பேருந்து நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய நகைக் கடை ஒன்று இருந்தது. அந்தக் கடைக்குள் வெள்ளையும் தொப்பையும் நிரம்பிய பெரியவர் ஒருவர் முதலாளியாக உட்கார்ந்துகொண்டிருந்தார். வெள்ளை நிற ஜிப்பாவும், முகம் நிறைய பவுடரும் அவரின் ஆடம்பரத்தைக் காட்டின. அவரின் தலைக்கு மேலே சுவரில் சமூகசேவகர் எஸ்.பவர்லால், கொடை வள்ளல் என்ற பெயர் போட்ட வண்ணப் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அவருக்கு வழங்கப்பட்ட கேடயங்களும் நினைவுப் பரிசுகளும் கடை முழுவதும் மாட்டப்பட்டிருந்தன.










