விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திருப்பதியில் தொடங்கிய பிரம்மோற்சவம்: பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளும் மலையப்பசாமி! 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 

News image
Updated On :27 செப்டம்பர் 2022, 11:14 am

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 

இந்த விழாவை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. 

கரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்மோற்சவம் எளிமையாக நடத்தப்பட்டது. மாட வீதிகளில் ஏழுமலையான் வீதியுலா வரும் நிகழ்வு நிறுத்தப்பட்டிருந்தது. 

இன்று தொடங்கிய அக்டோபர் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 

பிரம்மோற்சவ நாள்களில் மலையப்பசுவாமி வெவ்வேறு வாகனத்தில் வீதியுலா வருவதையடுத்து, இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளிலும்  மலையப்பசுவாமி உலா வருகிறார். 

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் வண்ண விளக்குகளாலும், பல லட்சம் டன் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம்,  மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனம்,  ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஏழுமலையான் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக 10 லட்சம் லட்டுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.