/

குலத்தைக் காக்கும் நம்ம வீட்டு குலசாமி : ஜோதிட தேடல்

நம் முன்னோர்கள் காலம்காலமாக வழிபடும் சாமி அவரவர் வீட்டு குலசாமி ஆகும்.

News image
குலத்தைக் காக்கும் நம்ம வீட்டு குலசாமி : ஜோதிட தேடல்
Updated On :28 ஜனவரி 2024, 4:18 am

ஜோதிடர் பார்வதி தேவி

நம் முன்னோர்கள் காலம்காலமாக வழிபடும் சாமி அவரவர் வீட்டு குலசாமி ஆகும். அவர்களின் முக்கிய கடவுளாக சிவன், பெருமாள், அம்பாள், முருகர் மற்றும் பல்வேறு அவதாரங்களாக அல்லது கன்னி தெய்வமாக அவர்களோடு காக்கும் காவல் தெய்வங்களாகலான ஐயனார், இடும்பன், மதுரை வீரன், கருப்பண்ண சாமி  என்று பல்வேறு பெயர்களில் இருக்கலாம்.  நம்முடைய குலசாமி மற்றும் இஷ்ட தெய்வங்கள் தான் நம் போகும் பாதை சரியாக உள்ளதா என்று உணர்த்தும் ஒரு முக்கிய வழிகாட்டி. அவர் இருக்கும் இடமே நமக்கு கலங்கரை விளக்கம். அதனால் தான் நம்முடைய நல்ல விஷயங்கள் ஆரம்பிக்கும் ஒரு முக்கிய புள்ளியாக குலசாமி நிற்கிறார். பெரியவர்கள் முதலில் நமக்கு சொல்லுவது குலசாமிக்கு ஒரு ரூபாய் காசு முடிந்து வை என்பார்கள். காரணம் குலசாமிதான் நம்மை நல்வழிகாட்டி சரியாக செயல்படுத்துவார் என்பது நம்முடைய பெரியோர்களின் நம்பிக்கை. 
 

ஒரு மனிதன் உயர்வதும் தாழ்வதும் அவரவர் கையில் உள்ளது என்பர். அந்த உயர்வை தடுப்பதும், பாதகம் செய்வதும் கோள்களின் தசா புத்திக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழும். கிரகங்களுக்கு  அப்பாற்பட்டு அவரவர் இஷ்ட தெய்வம் மற்றும் குலசாமி துணை இருந்தால் மட்டுமே அவரவர் முயற்சி உயர்வு பெரும். குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும்.  அதனால் தான் நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்பார்கள்.

Story image

ஒருவர் ஆண்டி ஆவதும் அரசனாவதும் நம்ம குலசாமியின் சரியான  வழிபாட்டில் உள்ளது. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்ற பழமொழி நம் வாழ்க்கைக்கு மிகவும் ஒத்து போகும். என்னதான் நமக்கு பிரச்னை, கஷ்டம் ஏற்பட்டாலும் ஒரு  சில  காலங்களுக்கு மட்டும் இருக்கும்.  தசா புத்தியின் மாற்றத்திற்கு ஏற்ப நல்லது - கெட்டது என்று மாறி மாறி நடைபெறும். ஆனால் வாழ்நாள் முழுவதும் பிரச்னைகள் தொடரும் என்றால் அதற்கு முக்கிய கரணம் குலசாமி சாபம் ஆகும். நிறைய பேருக்கு குலசாமி தெரியாது,  ஒரு சிலர் குல சாமியை மாற்றி வழிபடுவார்கள். குலசாமி சாபத்தால் பெயருக்கு எல்லாமே இருந்தும் அதனால் சந்தோஷம் இல்லாமல் போகும். எடுத்துக்காட்டாக திருமணம் செய்தும் சந்தோஷம் இருக்காது. குடும்பத்தில் ஈடுபாடு இல்லாத நிலை, குழந்தைகள் பிறந்து பிறந்து இறக்கும் நிலை, சொத்து இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை. இவை அனைத்திற்கும் குலசாமியின் அருள் இல்லாத நிலை. இவர்கள் என்ன தோஷ நிவர்த்தி செய்தாலும் குலசாமியை கண்டுபிடித்து அவர்களுக்கு வேண்டியதை செய்தால் மட்டுமே சரியாகும். நம்ம குலசாமி நிறைய நாள்கள் நமக்காக காத்திருக்கும் நிலை தோஷத்தை ஏற்படுத்துகிறது. குலதெய்வத்தை மறப்பது என்பது பெற்றோரை மறப்பது போன்றது.

குலசாமியை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்?

அதற்கு நிறைய விதிமுறைகள் உண்டு. அவை..

Story image

​குலசாமி பலம் பெற்றால் அனைத்தையும் வெற்றி காணலாம்.  எமன் கூட  குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் ஒருவன்  உயிரை எடுக்க முடியும். நம் இறந்த மூதாதையர்களின்  புனித ஆத்மாக்கள் மற்றும் குலத்தை  சார்ந்தவர்களை காக்க குலசாமி உடனிருந்து  நம்மை பண்படுத்தும். திருமணம் மற்றும் எந்த நல்ல காரியம் செய்யும் பொழுதும் குலசாமி உத்தரவு இருந்தால் அந்த குடும்பம் பரிபூர்ண திருப்தியுடன் சந்தோஷம் நிலவும். குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம். அதனால் அனைவரும் வருடம் ஒருமுறை செய்யவேண்டிய முறைகளை அவரவர் குடும்ப வழிபாட்டுக்கு ஏற்ப செய்யவும்.

குலதெய்வத்தை வணங்குவதல் கர்மவினை அகலும், அவரவர்  வம்சத்தை வளர்க்கும், குடும்பத்தை காவல் காக்கும், செய்யும் நற்காரியத்தில் ஜெயம் உண்டாகும், நோயிலிருந்து விடுபடுவோம், குடும்பம் தழைத்து ஓங்கும் என்பது  என்னுடைய காஞ்சி மஹா பெரியவா குருவின் வாக்கு.
 

ஜோதிட சிரோன்மணி தேவி 
வாட்ஸ்ஆப்: 8939115647
மின்னஞ்சல்: vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.