இச்சிறப்பு வாய்ந்த கோயில் கடந்த 9-2-1970-ல் குடமுழுக்கு செய்யப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் உத்தரவின்படி இத்திருக்கோயிலுக்கு திருப்பணி செய்திட 13வது நிதி ஆணைய நிதியிலிருந்து ரூ.70 லட்சம் நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பணி தொடங்குவதற்கான பூமிபூஜை இன்று, காலை 7 மணிக்கு நடைபெற்றது. பூமிபூஜையில் சிதம்பரம் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் முதல் கல்லை எடுத்துக் கொடுத்து திருப்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் க.சிவக்குமார், உதவிப் பொறியாளர் காத்தவராயன், நகரமன்ற துணைத்தலைவர் ரா.செந்தில்குமார், மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், கோயில் அலுவலர்கள் ராஜ்மோகன், வாசு, வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூமிபூஜையை கோயில் அர்ர்சகர் ராஜாஐயர் செய்து வைத்தார்.