தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐம்பெருங் காப்பியம் சீவக சிந்தாமணி - மூலமும் உரையும் (இரண்டு, மூன்றாம் பாகங்கள்)

இத்தகைய புதிய பதிப்பு முயற்சிகள் சிந்தாமணி சிறக்க உதவியாக இருக்கும்.

News image
Updated On :11 மே 2026, 4:50 pm IST

ஐம்பெருங் காப்பியம் சீவக சிந்தாமணி - மூலமும் உரையும் (இரண்டு, மூன்றாம் பாகங்கள்), உரையாசிரியர் - முனைவர் கரு. முத்தய்யா, பக். 592, ரூ. 500; பக். 584, ரூ. 600; கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600 033, ✆ 04565 - 238783.

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை வெளியிட்ட கோவிலூர் மடம், சீவகசிந்தாமணியையும் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளது. பின்னிரு நூல்களில் இரண்டாம் பாகத்தில் 1,144 பாடல்களுக்கும், மூன்றாம் பாகத்தில் 1,151 பாடல்களுக்கும் மூலத்துடன் பொருளும் பதவுரையும் தேவைப்படும் இடங்களில் விளக்கமும் தந்திருக்கிறார் உரையாசிரியர் கரு. முத்தய்யா.

உ.வே.சா. விளக்கக் குறிப்புகளுடன் நச்சினார்க்கினியர் விளக்கத்தையும் ஒப்புநோக்கி, எளிமையாக, ஆனால் ஆய்வு மாணவர்களும் பயனுறத்தக்க உரை நூலைத் தந்துள்ளார்; வள்ளுவத்துக்கு விளக்கமாகவும் நூல் அமைவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிந்தாமணி முழுவதும் திருத்தக்க தேவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் கவிநயமும் பொருள் நயமும் கொண்டவை. கன்னி மாநகர்க் கன்னியர் சூழ்தரக் / கன்னி மாடம் அடையக் கடிமலர்க் / கன்னி நீலக்கண் கன்னிநற் றாய்க்கவள் / கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினர். ஏழு முறை இடம்பெறும் கன்னி என்ற சொல் விதவிதமான பொருள் தருகிறது.

சீவகனின் மகிழ்ச்சிமிக்க வாழ்வை உற்சாகமான பாடல்களில் விவரிக்கும் திருத்தக்க தேவர், காப்பியத்தின் நிறைவில் சீவகன் கூற்றாக நிலையாமை பற்றிக் குறிப்பிடுகிறார். இந்தப் பாடல்கள் யாவும் தனிச் சிறப்பு கொண்டவை. ஒளிறுதேர்... என்ற பாடலில் சீவகன் செய்த தவத்தைப் போராக உருவகித்துப் பாடுகிறார் தேவர்.

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் அளவுக்கு மணிமேகலையும் மணிமேகலை அளவுக்கு சீவக சிந்தாமணியும் தமிழ் மக்களை, வாசகர்களைச் சென்றடையவில்லை எனலாம்.

இத்தகைய புதிய பதிப்பு முயற்சிகள் சிந்தாமணி சிறக்க உதவியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.