தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இசை அரசி பி. சுசீலா (ஒரு சகாப்தத்தின் இன்னிசைப் பயணம்)

இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நூலாசிரியர் கோடிட்டுக் காட்டும் பாடல்களை நமது அறிதிறன் பேசி உதவியுடன் உடனுக்குடன் ஒலிக்க விட்டு ரசிக்க இயலுவது கூடுதல் இன்பம்.

News image
Updated On :30 மார்ச் 2026, 1:28 pm

இசை அரசி பி. சுசீலா (ஒரு சகாப்தத்தின் இன்னிசைப் பயணம்)- பி.ஜி.எஸ். மணியன்; பக். 448; ரூ. 450; வைகுந்த் பதிப்பகம், நாகர்கோவில்-629 002, ✆ 94420 77268.

தென்னிந்திய திரையிசை வரலாற்றை பி. சுசீலா எனும் அல்லிசை புள் (நைட்டிங்கேல் பறவை) தவிர்த்து விட்டு யாராலும் எழுதவே முடியாது. தனது ஆத்மார்த்த உழைப்பாலும் ஈடுபாட்டாலும் பொறுமையாலும்தான் பி. சுசீலாவின் உலக சாதனையான 17,965 பாடல்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன.

அதிகாலை சாதகம் செய்ய அப்பாவின் வற்புறுத்தலால் எழுந்து, விருப்பமில்லாமல் செய்த சாதகங்கள்தான் பின்னாளில் ஏழு ஸ்வரங்களையும் தனதாக்கிக் கொண்ட சாதனையை அந்த இசையரசிக்குச் சொந்தமாக்கியது.

பிறமொழி பாடகர்களைப் பாட வைக்கத் தயங்கிய காலத்தில் தனது குரலை அந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்படி பாடத் தொடங்கிய நேரத்தில் தனித்துவம் பெற்றார் பி. சுசீலா. தமிழில் 'ல- ள- ழ' என வேறுபடுத்தி பாடல்களைப் பாடியதில் இவரது திறன் தனித்துவமானது.

ஒவ்வொரு இசையமைப்பாளருடனும் பி. சுசீலாவின் இசைப் பயணம் எப்படி தொடங்கியது; இசையமைப்பாளர்களின் குறிப்புகளுக்குக் கூடுதலாக இனிமை சேர்த்த அவரின் ஞானம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் ஏராளமாக இருக்கின்றன.

மொத்தம் 40 அத்தியாயங்கள், எண்ணிலடங்கா சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் பி. சுசீலா வாழும் காலத்திலேயே வந்திருப்பதால் இந்த நூல் நிச்சயம் அவரது ஆசிபெறும் என்பதில் ஐயமில்லை. திருவிளையாடல் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியை விவரிக்கும் விதம் இந்நூலாசிரியரின் மொழியாளுமையையும், இசை ஞானத்தையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நூலாசிரியர் கோடிட்டுக் காட்டும் பாடல்களை நமது அறிதிறன் பேசி உதவியுடன் உடனுக்குடன் ஒலிக்க விட்டு ரசிக்க இயலுவது கூடுதல் இன்பம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.