இசை அரசி பி. சுசீலா (ஒரு சகாப்தத்தின் இன்னிசைப் பயணம்)- பி.ஜி.எஸ். மணியன்; பக். 448; ரூ. 450; வைகுந்த் பதிப்பகம், நாகர்கோவில்-629 002, ✆ 94420 77268.
தென்னிந்திய திரையிசை வரலாற்றை பி. சுசீலா எனும் அல்லிசை புள் (நைட்டிங்கேல் பறவை) தவிர்த்து விட்டு யாராலும் எழுதவே முடியாது. தனது ஆத்மார்த்த உழைப்பாலும் ஈடுபாட்டாலும் பொறுமையாலும்தான் பி. சுசீலாவின் உலக சாதனையான 17,965 பாடல்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன.
அதிகாலை சாதகம் செய்ய அப்பாவின் வற்புறுத்தலால் எழுந்து, விருப்பமில்லாமல் செய்த சாதகங்கள்தான் பின்னாளில் ஏழு ஸ்வரங்களையும் தனதாக்கிக் கொண்ட சாதனையை அந்த இசையரசிக்குச் சொந்தமாக்கியது.
பிறமொழி பாடகர்களைப் பாட வைக்கத் தயங்கிய காலத்தில் தனது குரலை அந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்படி பாடத் தொடங்கிய நேரத்தில் தனித்துவம் பெற்றார் பி. சுசீலா. தமிழில் 'ல- ள- ழ' என வேறுபடுத்தி பாடல்களைப் பாடியதில் இவரது திறன் தனித்துவமானது.
ஒவ்வொரு இசையமைப்பாளருடனும் பி. சுசீலாவின் இசைப் பயணம் எப்படி தொடங்கியது; இசையமைப்பாளர்களின் குறிப்புகளுக்குக் கூடுதலாக இனிமை சேர்த்த அவரின் ஞானம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் ஏராளமாக இருக்கின்றன.
மொத்தம் 40 அத்தியாயங்கள், எண்ணிலடங்கா சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் பி. சுசீலா வாழும் காலத்திலேயே வந்திருப்பதால் இந்த நூல் நிச்சயம் அவரது ஆசிபெறும் என்பதில் ஐயமில்லை. திருவிளையாடல் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியை விவரிக்கும் விதம் இந்நூலாசிரியரின் மொழியாளுமையையும், இசை ஞானத்தையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நூலாசிரியர் கோடிட்டுக் காட்டும் பாடல்களை நமது அறிதிறன் பேசி உதவியுடன் உடனுக்குடன் ஒலிக்க விட்டு ரசிக்க இயலுவது கூடுதல் இன்பம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூமராங் சிறுகதைகள்

வாக்காளர் உரிமைச் சட்டம்

வெறுப்பு அரசியல்

நாவல் வடிவில் காளிதாசரின் சாகுந்தலம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


