தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நம் காலத்தின் கதை

ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் வகையிலான சுவாரஸ்யமான நூல்.

News image
Updated On :30 ஜூன் 2025, 1:46 pm

நம் காலத்தின் கதை; கார்குழலி; பக். 168; ரூ.200; கிழக்கு பதிப்பகம், சென்னை -14. ✆ 9500 045609

பொதுவாக சிறுகதை, புதினம், கவிதைகள் ஆகிய வகைப்பாடுகளில்தான் அதிகமான புத்தகங்கள் வெளிவருகின்றன. இந்த 'நம் காலத்தின் கதை' நூல் சற்று வித்தியாசமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. "வானை அளப்போம்' என்ற தலைப்பில் தொடங்கி 'பொன்னாக மின்னும் காக்கை' வரை மொத்தம் 26 தலைப்புகளில் அருமையான தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

நமக்குத் தெரிந்த சமகாலத்து தகவல்கள், நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகள், அதன் பின்னணி விவரங்கள் ருசிகரமாகத் தரப்பட்டுள்ளன. குரங்கு வழிபாடு, செல்லப்பிராணிகளின் வளர்ப்பு, காக்கைகளைப் பற்றிய தகவல்கள் எல்லாமே வியப்பை ஏற்படுத்துகிறது.

நீலமணிக்கல்லின் அதிசயக் கதை , ஒலிம்பிக்ஸில் நிலவும் பாலின சர்ச்சை, சீழ்க்கை (விசில்) அடித்து மனிதர்களை அடையாளம் காணும் கிராமம், பத்திரிகைகளில் வெளியாகும் குறுக்கெழுத்து போட்டிக்கும் மனித உடற்பயிற்சிக்குமான தொடர்பு, தையல் இயந்திரத்தின் வரலாறு, ஆதிகாலத்தில் மனிதன் எந்தெந்தக் கருவிகளால் உடைகளை தைத்துக்கொண்டான் போன்ற விவரங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.

'பிரமிடு எனும் கலாசார அதிசயம்' உண்மையில் அனைவும் அறிந்துகொள்ள வேண்டிய அதிசயம்தான். மரங்களின் மெüனமொழி என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தகவல்கள் சென்னைவாசிகளுக்கு நல்ல தகவல். ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் வகையிலான சுவாரஸ்யமான நூல்.

நம் காலத்தின் கதை; கார்குழலி; பக். 168; ரூ.200; கிழக்கு பதிப்பகம், சென்னை -14. ✆ 9500 045609

பொதுவாக சிறுகதை, புதினம், கவிதைகள் ஆகிய வகைப்பாடுகளில்தான் அதிகமான புத்தகங்கள் வெளிவருகின்றன. இந்த 'நம் காலத்தின் கதை' நூல் சற்று வித்தியாசமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. "வானை அளப்போம்' என்ற தலைப்பில் தொடங்கி 'பொன்னாக மின்னும் காக்கை' வரை மொத்தம் 26 தலைப்புகளில் அருமையான தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

நமக்குத் தெரிந்த சமகாலத்து தகவல்கள், நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகள், அதன் பின்னணி விவரங்கள் ருசிகரமாகத் தரப்பட்டுள்ளன. குரங்கு வழிபாடு, செல்லப்பிராணிகளின் வளர்ப்பு, காக்கைகளைப் பற்றிய தகவல்கள் எல்லாமே வியப்பை ஏற்படுத்துகிறது.

நீலமணிக்கல்லின் அதிசயக் கதை , ஒலிம்பிக்ஸில் நிலவும் பாலின சர்ச்சை, சீழ்க்கை (விசில்) அடித்து மனிதர்களை அடையாளம் காணும் கிராமம், பத்திரிகைகளில் வெளியாகும் குறுக்கெழுத்து போட்டிக்கும் மனித உடற்பயிற்சிக்குமான தொடர்பு, தையல் இயந்திரத்தின் வரலாறு, ஆதிகாலத்தில் மனிதன் எந்தெந்தக் கருவிகளால் உடைகளை தைத்துக்கொண்டான் போன்ற விவரங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.

'பிரமிடு எனும் கலாசார அதிசயம்' உண்மையில் அனைவும் அறிந்துகொள்ள வேண்டிய அதிசயம்தான். மரங்களின் மெüனமொழி என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தகவல்கள் சென்னைவாசிகளுக்கு நல்ல தகவல். ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் வகையிலான சுவாரஸ்யமான நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.