டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

விழித்தால் விடியும் (தமிழியக்கக் கட்டுரைகள்)

விழித்தால் விடியும் (தமிழியக்கக் கட்டுரைகள்) - புலவர் வே.பதுமனார்; பக்.224; ரூ.200;  செயக்கொடி பதிப்பகம், குடியேற்றம்-2 ;  04171- 221703.

News image
Updated On :22 ஏப்ரல் 2019, 1:17 am IST

விழித்தால் விடியும் (தமிழியக்கக் கட்டுரைகள்) - புலவர் வே.பதுமனார்; பக்.224; ரூ.200;  செயக்கொடி பதிப்பகம், குடியேற்றம்-2 ;  04171- 221703.
தமிழைப் படிப்பது,  பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் எல்லாம் ஆர்வமற்று தமிழ்மக்கள் இருப்பதை எண்ணி வருந்தி, இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம்? என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள ஆழமான கட்டுரைகள் அடங்கிய நூல்.  இயற்கையோடியைந்து தமிழ் எப்படி உருவாகி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர்.  
வீட்டில், கடைகளில், ஊடகங்களில், திரைப்படங்களில், சின்னத்திரையில் எல்லாம்  நல்ல தமிழ் பேசப்படுவதில்லை என வருந்தும் நூலாசிரியர்,   "ஒரு மொழி எப்போது பேச்சு வழக்கை இழந்துவிடுகிறதோ அப்போதே அது செத்த மொழி ஆகிவிடுகிறது' என்பதனால் தமிழர்கள் தமிழில் பேச வேண்டும் என்கிறார். "எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள்.  அதற்காக தாய்மொழியைக் கைவிடலாமா?' என்ற நூலாசிரியரின் கேள்வி மனதைத் தொடுகிறது. 
நமது வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும்.  தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை உள்ள பாடங்களைத் தமிழிலேயே கற்றுத் தர வேண்டும்.  புதிய சொற்களைத் தமிழில் உருவாக்க வல்லுநர் குழுவை ஏற்படுத்த வேண்டும்.  வேற்று மொழி கலவாமல் தமிழில் எழுத வேண்டும்;  பேச வேண்டும்  என தமிழைக் காக்க நூலாசிரியர் கூறும் கருத்துகள் எண்ணிப் பார்க்கத் தக்கவை. 
பிறமொழி கலந்த சொற்களைக் கண்டறிய தேவநேயப் பாவாணர் வழங்கிய பைந்தமிழ்க் கொடையும் நூலில் அளிக்கப்பட்டுள்ளது.  தமிழர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய சிறந்த நூல்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.