கேணி - கோபால்தாசன்; பக்கம் 120; விலை.120; நீலம் பதிப்பகம் சென்னை,
கேணி கவிதை தொகுப்பு, கவிஞர் கோபால்தாசன் சிந்தனையின் ஊற்று . பல்வேறு பத்திரிகைகளில் அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து நூலாக தந்திருக்கும் கோபால்தாசன் கற்பனை வளமிக்கவர் என்பதற்கு இந்த தொகுப்பு ஒரு சான்றாகும். எழுகின்ற கற்பனையை எழுத்தில் அவர் கோர்த்திருக்கின்ற விதம் வாசிப்போரை நேசிக்க வைக்கும் என்றால் அது மிகையில்லை.
கவிதை என்பது வாழ்வின் பிம்பம். காலத்தின் கண்ணாடி. மொழியின் சுவை, என்பதை இவரின் ஒவ்வொரு கவிதைகளிலும் கண்டு கொள்ள முடிகிறது. வாழவைக்கும் பண்டிகை என்ற கவிதையில் இவர் பண்பாடு, கலாச்சாரத்தை பதிவு செய்து இருக்கிறார். தமிழனுக்கு என்று ஒரு குணம் உண்டு என்பதை மீண்டும் உறுதிபடுத்தி நாட்டின் வளமையை எல்லோரும் உணரச்செய்திருக்கிறார்.
அதே போல் தீபத் திருநாள் பற்றி பேசுகிற கவிதையில்
"தீபம் பலர் வாழ்வில் எண்ணெயின்றியே
எரிந்து கொண்டிருப்பது ஆச்சரியம்" - என்று சொல்லி நம்மை வியப்புக்குள்ளாகி இருக்கிறார். பண்பாடு கலாச்சாரம் பற்றியும் நம் பண்டிகைகள் பற்றியும் எழுதிய கவிஞர், உரிமைக்கு குரல் கொடுடா தமிழா என்று தமிழர்களின் வீரத்தையும் கொஞ்சம் தட்டி எழுப்புகிறார்.
"உணவின்றி உறக்கமின்றி
கடல்தாண்டி போனாலும்,
உயிருக்கு மதிப்பேதடா
தமிழா நம் உயிரென்ன
பறவையா மிருகமாடா" - என்று இன்றைய நிகழ்வுகளுக்கு எதிராக கோபத்தின் விளிம்பில் நின்று கொந்தளிக்கவும் செய்கிறார்.
நேசம், காதல், கோபம், கொண்டாட்டம், பண்பாடு கலாச்சாரம் என பல்வேறு சுவைகளை ஒருங்கே தொகுத்து நம் சிந்தனைகளையும் உற்றுக் கிணறாக மாற்றும் ஒரு அருமை தொகுப்புதான் இந்த கேணி, கவிஞர்களும், கவிதைகளை நேசிப்போர்களும் மட்டும் இன்றி அனைவருமே வாசிக்க வேண்டிய தொகுப்பு இது. கவிதைகளை போற்றுவோம். கவிஞரை வாழ்த்துவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


