/

வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குக்கு திமுகவினர் ரூ. 5,000 கொடுத்ததாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

News image

ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:35 am

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினர் வாக்குக்கு ரூ. 5,000 கொடுத்ததாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் தவெக வேட்பாளரும் கட்சியின் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "திமுகவினர் எப்போதெல்லாம் தோற்கின்றனரோ, அப்போதெல்லாம் ரௌடிசத்தை கையில் எடுக்கின்றனர்.

அதனை துறைமுகத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள். தேர்தலின்போது, சுமார் 40 பேருடன் அமைச்சர் சேகர்பாபு ரௌடிசம் செய்தார். எங்கள் வேட்பாளர் அசோக் குமாரையும் உடனிருந்த வெற்றியையும் அவர்கள் தாக்கினர்.

சைதாப்பேட்டையிலும் எங்களின் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திமுக கடைசியாக நம்பியது, வாக்குக்கு ரூ. 5,000 கொடுப்பதைத்தான். ஆனால், அந்த ரூ. 5,000-ஐ மக்கள் தூக்கியெறிந்ததால், ஒரு ஜனநாயகத்துக்கான வெற்றியாக இந்தத் தேர்தல் இருக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து, வாக்குக்காக பணம் கொடுக்கும் எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடவில்லை.

தலைவர் விஜய், ஒரு மாற்றத்துக்கான ஜனநாயகத்துக்கான அரசியலை ஆரம்பித்தாரோ, அவரின் வழியிலேயே எல்லா வேட்பாளர்களும் வீடுவீடாக மக்களிடம் சென்று, இன்று ஒரு பெரிய புரட்சியை தவெகவினர் உருவாக்கி இருக்கின்றனர். கண்டிப்பாக அதன் முடிவு பின்னர் தெரிய வரும்" என்று தெரிவித்தார்.

Summary

TN Polls 2026: TVK Leader Aadhav Arjuna alleges that DMK members distributed Rs 5,000 per vote

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.