நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

தீக்குள் விரலை வைத்தேன்

தீக்குள் விரலை வைத்தேன்-சி.மகேந்திரன்; பக்.312; ரூ.150; நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98, )044-26251968. புதியபார்வை இதழில் தொடராக வெளிவந்த பயணக்கட்டுரை என்றாலும், இலங்கையின் வரலாற்றையும்

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:08 am

சி. மகேந்திரன்

தீக்குள் விரலை வைத்தேன்-சி.மகேந்திரன்; பக்.312; ரூ.150; நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98, )044-26251968.

புதியபார்வை இதழில் தொடராக வெளிவந்த பயணக்கட்டுரை என்றாலும், இலங்கையின் வரலாற்றையும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வையும் கண்முன் நிறுத்துகிறது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலையே, "தீக்குள் விரலை வைத்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழீழத்துக்கும் ஒரே நம்பிக்கையாக இருந்த தலைவன் இன்றில்லை. ஒரு பெருந்தீ, சூழ்ச்சியால் அணைக்கப்பட்டு, நீறுபூத்த நெருப்பு கண்மறைவாய் கனன்று கொண்டிருக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த நூலுக்குத் துணைக்கட்டுரையில் (பூவரசு பூ பூக்கும்) நூலாசிரியர் குறிப்பிடுவதைப்போல, ""மனித வாழ்க்கை வாழை மரத்தைப் போன்றது. வாழைத் தோப்புகள் வெளித்தோற்றத்துக்கு அழிந்துவிட்டதைப்போல தோற்றம் தரும். ஆனால், உண்மையில் அவை அழிவதில்லை'' அந்த நம்பிக்கை வீண்போகாது என்பதை இந்நூலைப் படிப்பவரால் உணர முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.