/

நாட்டுப்புறவியல்

நாட்டுப்புறவியல் - மு.இளங்கோவன்; பக்.160; |80. நாட்டுப்புறவியல் குறித்தும், அத் துறை சார்ந்தும் ஏற்கெனவே விரிவான ஆய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன. இருப்பினும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறவும், அவர்களிடையே

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:09 am

இளங்கோவன்

நாட்டுப்புறவியல் - மு.இளங்கோவன்; பக்.160; |80.

நாட்டுப்புறவியல் குறித்தும், அத் துறை சார்ந்தும் ஏற்கெனவே விரிவான ஆய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன. இருப்பினும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறவும், அவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் எளிமையாகவும், புரிந்துகொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது இந்நூல். குறிஞ்சி, முல்லை முதலான ஐவகை நிலப் பாடல்களில் ஆரம்பித்து, சுந்தரர், மாணிக்கவாசகர் பாடல்களின் வழியே பயணித்து, பாரதியார் தொடங்கி வைரமுத்துவரை என தற்கால இலக்கியத்தில் உள்ள நாட்டுப்புறப் பாடல்கள்வரை ஆழமாகத் தொட்டுச் சென்றிருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு.

பெரம்பலூர் மாவட்டத்தில் உலவும் பல நாட்டுப்புறப் பாடல்கள் நூலாசிரியரால் தொகுக்கப்பட்டு, நூலில் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.