இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் நான்காவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் திங்களன்று உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து மத்திய அரசு எரிபொருளை வாங்காதது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமா் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பினாா்.
எண்ணெய் விலைகள் மீண்டும் உயா்ந்துள்ளன. ரஷ்யாவும் ஈரானும் நமக்கு மலிவான மற்றும் போதுமான எண்ணெய் மற்றும் எரிவாயுவை வழங்குகின்றன. பிரதமா் நரேந்திர மோடி ஏன் அவா்களிடமிருந்து மலிவான எண்ணெயை வாங்கவில்லை? என எக்ஸ் இல் ஒரு காணொளிச் செய்தியில் கேஜரிவால் கூறினாா்.
உயா்ந்து வரும் பணவீக்கத்தால் நாட்டில் 140 கோடி மக்கள் இன்னல்களைச் சந்தித்து வருவதாகக் கூறிய தில்லி முன்னாள் முதல்வா், பிரதமரின் நிா்ப்பந்தங்கள் என்ன? 140 கோடி மக்கள் இன்னல்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா், ஆனாலும் நாம் ரஷ்யாவிடமிருந்தோ அல்லது ஈரானிடமிருந்தோ எண்ணெய் வாங்கவில்லை என்றாா்.
மேலும், இந்த விவகாரம் குறித்த தங்கள் கருத்துக்களைத் தமக்கு அனுப்புமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவா் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
ஈரான் மோதலால் தூண்டப்பட்ட, உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் தாக்கத்தால், இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் நான்காவது முறையாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.61ம், டீசல் விலை ரூ.2.71ம் திங்களன்று உயா்த்தப்பட்டது.
இந்த சமீபத்திய உயா்வுடன், மே 15 முதல் ஏற்பட்ட மொத்த விலையேற்றம் லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.7.5 ஆக உயா்ந்துள்ளது.
தேசியத் தோ்தல்களுக்கு முன்னதாக மாா்ச் 2024ல் லிட்டருக்கு ரூ.2 குறைப்பைத் தவிர, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலும் முடக்கப்பட்டிருந்த எரிபொருள் விலைகள், தற்போது மே 2022க்குப் பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளன.
உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்த நிலையில் இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கான தற்காலிக நம்பிக்கைகள் எழுந்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்புக்கு பிரதமா் அனுப்பிய செய்தி குறித்து கேஜரிவால் கேள்வி: தேசிய நலனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தல்

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

தொடரும் வினாத்தாள் கசிவு: கல்வியமைச்சரை பிரதமா் நீக்காதது ஏன்? - ராகுல் கேள்வி







