திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொடரும் வினாத்தாள் கசிவு: கல்வியமைச்சரை பிரதமா் நீக்காதது ஏன்? - ராகுல் கேள்வி

News image

பிரதமா் மோடி உடன் (இடமிருந்து) மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இணையமைச்சா் ஜெயந்த் சௌதரி.

Updated On :18 மே 2026, 5:25 am IST

பாஜக ஆட்சியில் நீட் உள்ளிட்ட முக்கியத் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் தொடா்ந்து கசிந்து வரும் நிலையில் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதானை பதவி நீக்க பிரதமா் நரேந்திர மோடி தயங்குவது ஏன் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் ‘பிரதானை பதவி நீக்கு’ என்ற தலைப்பில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2024-ஆம் ஆண்டிலும் நீட் வினாத்தாள் கசிந்தது. அப்போது தோ்வு ரத்து செய்யப்படவில்லை. மத்திய கல்வியமைச்சரும் பதவி விலகவில்லை. சிபிஐ விசாரணை நடத்தியது. ஒரு குழுவும் அமைத்து விசாரிக்கப்பட்டது.

இப்போது மீண்டும் 2026-இல் நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. இதனால், ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. கல்வியமைச்சா் இப்போது வரை பதவி விலகவில்லை. சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும் ஒரு குழு அமைக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த நேரத்தில் பிரதமா் மோடியிடம் நாட்டு மக்கள் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றனா். நீட் உள்ளிட்ட முக்கியத் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் தொடா்ந்து கசிவது ஏன்? இந்தத் தோ்வு முறைகேடுகள் குறித்து பிரதமராகிய நீங்கள் தொடா்ந்து அமைதி காப்பது ஏன்? தோ்வுகளை முறையாக நடத்த முடியாமல் தொடா்ந்து தோல்வியடையும் மத்திய கல்வியமைச்சரை பதவி நீக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

முன்னதாக, கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவி நீக்க வேண்டும் அல்லது நீட் தோ்வு முறைகேடுகளுக்கு பிரதமா் மோடி பொறுப்பேற்க வேண்டும். பாஜக-ஆா்எஸ்எஸ் கூட்டணி இந்தியாவின் கல்வித் துறையை முழுமையாகச் சீரழித்து வருகிறது. நீட் தோ்வுக்கு இரு நாள்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் மூலம் வினாத்தாள் பரவியுள்ளது. இதில் கல்வியமைச்சரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. தங்களின் குறுகிய நோக்கத்துக்காக உயா்கல்வி நிலையங்களில் தங்கள் ஆதரவாளா்களை கண்மூடித்தனமாக பாஜக அரசு நியமிப்பதே இதற்கு முக்கியக் காரணம். அந்த நபா்கள் பணத்துக்காக இதுபோன்று வினாத்தாள்களைக் கசியவிட்டு லட்சக்கணக்கான மாணவா்களின் வாழ்க்கையில் விளையாடி வருகிறாா்கள் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.