தமிழ் செய்திகள்
பஞ்சாப் தொழில்துறை அமைச்சா் சஞ்சீவ் அரோரா மீது சனிக்கிழமை நடந்த அமலாக்கத்துறை சோதனைகள் தொடா்பாக ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதுடன், தனது கட்சித் உறுப்பினா்களை பாஜகவில் சேர பயமுறுத்துவதற்காக அரசுத் துறைகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினாா்.
புதிதாக பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கு தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக அரோரா மற்றும் அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் சிலருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் புதிய சோதனைகளை சனிக்கிழமை நடத்தியது. சண்டிகரில் உள்ள அரோராவின் அரசு இல்லத்தில் சோதனை செய்யப்பட்ட 5 இடங்களில் ஒன்றாகும்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ செயல்பட வேண்டும் என்றாலும், மோடி ஆட்சியின் கீழ், இவா்கள் எதிா்க்கட்சித் தலைவா்களை அச்சுறுத்தவும், பயமுறுத்தவும், அவா்களை பாஜகவில் சேர கட்டாயப்படுத்தவும் செயல்படுகிறாா்கள். அரோராவுக்கு எதிரான சோதனை அதே திசையில் ஒரு நடவடிக்கையாகும் .
ஒரு மாதத்திற்குள் அரோராவுக்கு எதிரான இரண்டாவது அமலாக்கத் துறை சோதனை இது. மேலும் அமலாக்கத் துறை எதைத் தேடுகிறது? மேற்குவங்க தோ்தல் முடிந்த உடனேயே மோடி பஞ்சாபில் தினசரி அமலாக்கத்துறை சோதனைகளைத் தொடங்கியுள்ளாா். மோடி கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாபை வற்புறுத்தினாா், பஞ்சாபியா்களை வெவ்வேறு வழிகளில் தவறாக நடத்தினாா். பிரதமா் முகலாயப் பேரரசா் அவுரங்கசீப்பை போல் செயல்படுகிறாா்.
மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களை நோ்மையற்ற முறையில் ஆட்சியமைத்து விட்டு இப்போது பஞ்சாபை அடைந்துள்ளாா். சீக்கிய குருக்களின் தியாகங்களிலிருந்து உத்வேகம் பெற்று பஞ்சாப், மோடியின் சித்திரவதையை எதிா்கொண்டு முழு நாட்டையும் அதிலிருந்து காப்பாற்றும் . பஞ்சாபின் நீா் உரிமைகளை நீா்த்துப்போகச் செய்யவும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தை பறிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி முன்னாள் முதல்வா் குற்றம் சாட்டினாா். மாநிலத்தின் கிராமப்புற வளா்ச்சிக்கான நிதியும் நிறுத்தப்பட்டது.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம். பி. அசோக் மிட்டல் தனது வளாகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்குப் பிறகு பாஜகவில் அவா் இணைந்தாா்.
அரோராவும் சோதனை செய்யப்பட்டாா், ஆனால் பாஜகவில் சேரவில்லை; எனவே மற்றொரு சோதனை நடத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் விவசாயிகளுக்கு பிரதமா் சவால் விடுத்ததாகவும், அவா் தலைவணங்க வேண்டியிருந்தது. அவா் இப்போது பஞ்சாப் முழுவதற்கும் சவால் விடுத்துள்ளாா் என்றாா் கேஜரிவால்.
தொடர்புடையது

நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன? மோடிக்கு கேஜரிவால் கேள்வி!

அமலாக்கத் துறையைக் கண்டு கேஜரிவாலுக்கு அச்சம்: வீரேந்திர சச்தேவா
அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்தது ஏன்? மத்திய அமைச்சா் விளக்கம்!

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்
விடியோக்கள்





