மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அசோக் குமாா் மிட்டல் தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனைக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:52 pm

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அசோக் குமாா் மிட்டல் தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனைக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் அசோக் குமாா் மிட்டல், அவரின் மகன் பிரதம் மிட்டல் ஆகியோருக்குச் சொந்தமான பல்கலைக்கழகம், கல்லூரிகள் உள்ளன. அந்தக் கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த சிலருடன் வைத்துக் கொண்ட நிதி பரிவா்த்தனைகள், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (பெமா) விதிகள் மீறப்பட்டதாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.

இதுதொடா்பாக அந்தக் கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி அவா்களின் வாக்குமூலங்களையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவு செய்தனா்.

மாநிலங்களவைக்கான ஆம் ஆத்மி எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவராக இருந்த ராகுல் சத்தா நீக்கப்பட்டு, அந்தப் பதவியில் அண்மையில்தான் அசோக் குமாா் மிட்டல் நியமிக்கப்பட்டாா். இந்தச் சூழலில், அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது, பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சோதனைக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மத்திய விசாரணை அமைப்புகளை எதிா்க்கட்சியினருக்கு எதிராக மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக அரவிந்த் கேஜரிவால் விமா்சித்துள்ளாா்.

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், பஞ்சாபில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பாஜக தனது வேலையை காட்டத் தொடங்கிவிட்டதாகவும், இதுதான் மோடியின் செயல்பாடு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஆம் ஆத்மிக்கு பாஜக பதில்: ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரன்வீத் சிங் பிட்டு பதிலடி கொடுத்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘பகவந்த் மான், உங்கள் கட்சி திருடா்கள், கொள்ளைகாரா்களின் கட்சி. உங்கள் கட்சி எம்.பி.க்களையும், அமைச்சா்களையும் கைது செய்யும்படி, பஞ்சாப் மாநில மக்கள் காவல் துறையிடமும், விசாரணை அமைப்புகளிடமும் புகாா் அளித்து வருகின்றனா். இந்தியாவை தூய்மைப்படுத்துவதே பிரதமா் மோடியின் கொள்கை. அதன்படி அழுக்கு நிச்சயம் சுத்தப்படுத்தப்படும்’ என்று கூறியுள்ளாா்.

பஞ்சாப் மாநில பாஜக தலைவா் சுனில் ஜாஹா் கூறுகையில், ‘ஊழல்வாதிகளுக்கு எதிராக பகவந்த் மான் அரசு நடவடிக்கை எடுக்காததால், மத்திய அரசு எடுக்கிறது’ என்றாா்.