திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் அமோக வெற்றி பற்றி..

News image

ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் - file photo

Updated On :30 மே 2026, 3:32 pm IST

பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் நன்றி தெரிவித்தார்.

பஞ்சாபில் உள்ள 8 மாநகராட்சிகள், 75 நகராட்சிகள் மற்றும் 20 நகர பஞ்சாயத்துகளுக்கு கடந்த மே 26-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரிடையே கடும் போட்டி நிலவியது. இதனிடையே ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது.

இதுதொடர்பாக கேஜரிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குகளை அளித்த பஞ்சாப் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பஞ்சாபின் நகர்ப்புறங்களில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிக்காக, பஞ்சாப் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குகளை அளித்ததன் மூலம், பகவந்த் மான் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை மக்கள் பாராட்டியுள்ளனர் என்று அவர் கூறினார்.

எதிர்காலத்திலும் இதேபோன்று நாங்கள் தொடர்ந்து நல்ல பணிகளைச் செய்வோம். பாஜக இப்போது துடைத்தெறியப்பட்டுவிட்டது. பஞ்சாபில் உள்ள சிறு வணிகர்கள் மீது பலமுறை சோதனைகளை நடத்தி மக்களைத் துன்புறுத்திய கட்சி'க்கு, இன்று மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

பஞ்சாபில் நடைபெற்ற நகரப் பஞ்சாயத்துத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 246 வார்டுகளில் 105 வார்டுகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. அதேவேளையில், நகராட்சி மன்றங்களுக்கான முடிவுகளில், அறிவிக்கப்பட்ட 1,272 வார்டுகளில் 630 வார்டுகளை வென்று ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது.

Summary

Aam Aadmi Party (AAP) national convener Arvind Kejriwal, on Friday, in a veiled attack at the Bhartiya Janata Party, said that the "ED Party, which harassed people by conducting raids on small traders in Punjab," has been wiped out.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.