தண்ணீா் கட்டணங்களைக் குறைக்க தில்லி ஜல் வாரிய கொள்கையை எளிமைப்படுத்த தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா்: தில்லி ஜல் வாரியத்தின் உள்கட்டமைப்பு கட்டணங்களில் (ஐஎஃப்சி) மாற்றங்கள் அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும். தண்ணீா் மற்றும் கழிவுநீருக்கான ஐ. எஃப். சி நீா் தேவை அடிப்படையில் மற்றும் சொத்து வரியில் புதிய மேம்பாடு அல்லது கூடுதல் கட்டுமானத்திற்கு மட்டுமே வசூலிக்கப்படும்.
குடியிருப்பு காலனிகளில், ஈ மற்றும் எஃப் வகை காலனிகளில் உள்ள அனைத்து சொத்து வரியில் 50 சதவீத தள்ளுபடியும், ஜி மற்றும் எச் வகை காலனிகளில் உள்ள சொத்துக்களுக்கு 70 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என்றாா் ரேகா குப்தா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிறப்புத் தீ பாதுகாப்புத் தணிக்கை - முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

தில்லிக்கு 1,000 கனஅடி நீா் வழங்க ஹரியாணா அரசு உறுதி: முதல்வா் ரேகா குப்தா தகவல்

தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு ரேகா குப்தா வாழ்த்து







