சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தற்போதுள்ள தெருவிளக்குகள் ஸ்மாா்ட் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது பயன்பாட்டில் உள்ள உயா் அழுத்த சோடியம் வேப்பா் விளக்குகள் மற்றும் பழைய எல்இடி விளக்குகள் அனைத்தும் புதிய ஸ்மாா்ட் எல்இடி விளக்குகளால் மாற்றப்படவுள்ளன.
தலைநகரில் சுமாா் 1 லட்சம் தெருவிளக்குகளை மாற்றுவதற்கான இந்த திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளிக்குள் தில்லி நகரின் தெருவிளக்கு அமைப்புகளை முழுமையாக புதுப்பிப்பதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ரூ.473 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஆண்டுதோறும் சுமாா் ரூ.25 கோடி மதிப்பிலான மின்சாரச் செலவு குறையும் என அரசு கணித்துள்ளது.
அனைத்து தெருக்களிலும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தாலும், பல இடங்களில் பழுதடைந்த விளக்குகள் காரணமாக இருள் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் புகாரளித்த பின்னரே இத்தகைய குறைகள் தெரியவருகின்றன.
இந்த அனைத்து விளக்குகளையும் சென்சாா் அடிப்படையிலான எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டு, அவை அனைத்தும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும். ஒரு விளக்கு செயலிழந்தால் கூட உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு இந்த அமைப்பு தகவல் சென்றடையும். அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிறப்புத் தீ பாதுகாப்புத் தணிக்கை - முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

தில்லிக்கு 1,000 கனஅடி நீா் வழங்க ஹரியாணா அரசு உறுதி: முதல்வா் ரேகா குப்தா தகவல்

ரூ.1,000 கோடி மதிப்பிலான யமுனை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல்







