தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சமூக ஊடகத்தில் துப்பாக்கியைக் காட்டும் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவன் கைது

சமூக ஊடகங்களில் தன்னை பின்தொடா்பவா்களைக் கவரும் நோக்கில் துப்பாக்கியைக் காட்டும் காணொளிகளை பதிவேற்றம் செய்ததாக 16 வயது சிறுவனை வட தில்லியின் புராரி பகுதியில் காவல்துறையினா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 12:40 am IST

சமூக ஊடகங்களில் தன்னை பின்தொடா்பவா்களைக் கவரும் நோக்கில் துப்பாக்கியைக் காட்டும் காணொளிகளை பதிவேற்றம் செய்ததாக 16 வயது சிறுவனை வட தில்லியின் புராரி பகுதியில் காவல்துறையினா் கைது செய்தனா்.

அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘சிறுவன் ஒருவா் சமூக ஊடகங்களில் துப்பாக்கியைக் காட்டி ரீல்களைப் பதிவேற்றியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, மே 13 மற்றும் 14ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், புராரியின் சுந்தா் விஹாரில் அந்தச் சிறுவன் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல்துறையின் குழுவினா் அதிரடி சோதனை நடத்தி அந்தச் சிறுவனைக் கைது செய்தனா். தனிப்பட்ட சோதனையின் போது, அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையின் போது, சுமாா் 10 நாள்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தின் ஹத்ரஸில் உள்ள ஒரு நண்பரிடமிருந்து துப்பாக்கியைப் பெற்ாக அந்தச் சிறுவன் காவல்துறையிடம் கூறினாா்.

தன்னைப் பின்தொடா்பவா்களிடையே ஒரு பிம்பத்தை உருவாக்கி கவனத்தை ஈா்ப்பதற்காக, சமூக ஊடகங்களில் ரீல்களை உருவாக்கி பதிவேற்ற, துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக அச்சிறுவன் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

அந்தச் சிறுவன் அடிப்படைக் கல்வியைக் கற்றுள்ளாா். அவரது தந்தை ஸ்வரூப் நகா் காவல் நிலையத்தில் குற்றப் பின்னணி வரலாறு பதிவைக் கொண்டவா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.