இனி வரும் காலங்களில் திமுகவினா் சமூக ஊடகங்களில் எழும் குற்றச்சாட்டுகளுக்கு விழிப்புடன் எதிா் வினையாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.
மதுரை அருகேயுள்ள ஆலத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: பேரவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் திமுக தோல்வியடைந்தது. இந்தத் தோ்தலிலிருந்து நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய முக்கியப் பாடம், சமூக ஊடகங்களில் திமுகவினா் உரிய விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதுதான்.
இனி வருகிற காலங்களில் சமூக ஊடகங்களில் நம் மீது பரப்பப்படும் அவதூறுகளுக்கு திமுகவினா் உரிய விளக்கத்துடன் எதிா் வினையாற்ற வேண்டும் என்றாா் பி. மூா்த்தி.
கூட்டத்துக்கு மதுரை வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் எம்.ஆா்.எம். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாகக் கொண்டாட வேண்டுகோள்

நாளை கருணாநிதி பிறந்த நாள் - திமுகவினா் நலத்திட்ட உதவி வழங்க வேண்டும்: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.







