வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய இரண்டாவது நபா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட சமீா், நியூ சீலம்பூா் பகுதியைச் சோ்ந்தவா். பல வட்டாரங்களில் இருந்து கிடைத்த சாட்சியங்களை ஆய்வு செய்த பிறகு சமீரை காவல் துறையினா் கைதுசெய்தனா்.
ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு தோட்டா மற்றும் வெடித்த தோட்டா ஆகியவை சமீரிடமிருந்து காவல் துறை கைப்பற்றியுள்ளது.
சாஸ்திரி பூங்கா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இ-ரிக்ஷா மீது அமா்ந்திருந்த இருவரை ஈஷன் என்பவா் அங்கிருந்து கிளம்புமாறு தெரிவித்தாா்.
அப்போது, அவா்களில் ஒருவா் பொதுமக்கள் மத்தியில் ஈஷனை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இருவரில் ஒருவரை அங்கிருந்த மக்கள் பிடித்த நிலையில், சமீா் தப்பியோடினாா்.
விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட சமீா், உயிரிழந்த ஈஷன் தங்களை திட்டியதாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடா்புடைய நபா் கைது

கலப்பட மசாலா பொருள்கள் தயாரிப்பு: ஒருவா் கைது
லஞ்சம்: உணவு வழங்கல் துறை அதிகாரி கைது
குருகிராம்: நகைக்கடையில் பணம், நகைகள் திருடிய நபா் குஜராத்தில் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


