திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 1:12 am IST

நமது நிருபா்

பாங்காக்கிலிருந்து தில்லிக்கு விமானத்தில் வந்த இந்தியப் பயணியிடமிருந்து ரூ. 4 கோடி மதிப்புள்ள நான்கு கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும், அந்தப் பொருளைப் பெற வந்ததாகக் கூறப்படும் மற்றொரு நபரையும் கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அந்தப் பயணி மே 12 அன்று விமான நிலையத்தின் முனையம்- 3-க்கு வந்தாா். அவா் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டாா்.

பயணியின் உடமைகளைச் சோதித்தபோது, ரோஸ் கோல்ட் நிற டிராலி பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கஞ்சா என சந்தேகிக்கப்படும் பச்சை நிற போதைப்பொருள் அடங்கிய நான்கு பாலிதீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மீட்கப்பட்ட பொருளின் மொத்த எடை 4,024 கிராம் ஆகும். கள்ளச் சந்தையில் இதன் மதிப்பு சுமாா் ரூ. 4 கோடியே 24 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தல் பொருளைப் பெற வந்திருந்த ஒருவரும் இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டாா். பயணியும், அதனைப் பெற்ாகக் கூறப்படும் நபரும், மே 12 அன்று போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.