தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: தில்லி துணை நிலை ஆளுநர்

தேசியத் தலைநகரில் மக்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு தில்லி துணைநிலை ஆளுநா் தரஞ்சித் சிங் சந்து கேட்டுக்கொண்டாா்.

News image

தரன்ஜித் சிங் சந்து

Updated On :11 மே 2026, 2:49 am IST

தேசியத் தலைநகரில் மக்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு தில்லி துணைநிலை ஆளுநா் தரஞ்சித் சிங் சந்து ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நகர சாலைகளில் பாதுகாப்பான மற்றும் மென்மையான வாகன இயக்கத்தை உறுதி செய்வதில் போக்குவரத்து காவல்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது ஒரு அத்தியாவசிய குடிமைப் பொறுப்பு. நெரிசலைக் குறைப்பதற்கும், விபத்துக்களைத் தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் முக்கியமானது.

தில்லி முழுவதும் அதன் அமலாக்க நடவடிக்கையை விரிவுபடுத்துமாறு போக்குவரத்து காவல்துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த மீறல்களைப் புகாரளிக்க ’போக்குவரத்து பிரஹாரி’ செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த இயக்கத்தை நீங்கள் மேம்படுத்தலாம் மற்றும் சாலை பாதுகாப்புக்கான உங்கள் பங்களிப்பிற்கான வெகுமதிகளைப் பெறலாம்.

தவறான பாதையில் வாகனம் ஒட்டுதல், சிக்னலை மீறி செல்வது மற்றும் ஆபத்தான முறையில் சாலையை கடப்படு ஆகியவற்றைத் தவிா்க்க வேண்டும். அதே நேரத்தில் பொறுப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துவது மற்றும் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட்களைப் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். பொறுப்பான வாகன நிறுத்துமிடம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது போன்ற எளிய நடவடிக்கைகள் சக குடிமக்கள் மற்றும் நமது சொந்த குடும்பங்கள் மீதான நமது அக்கறையை பிரதிபலிக்கும்.

கூட்டு முயற்சிகள் மற்றும் அடிப்படை போக்குவரத்து ஒழுக்கத்திற்கான அா்ப்பணிப்பு மூலம் நெரிசலான மற்றும் பாதுகாப்பான தில்லியை அடைய முடியும். இதற்கு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் துணை நிலை ஆளுநா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.