தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து மாநில தலைமை முடிவெடுக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் தவெக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைமை ஆலோசித்து முடிவு செய்ய அக்கட்சி மேலிடம் அறிவுறுத்தல்

News image

விஜய் / ராகுல் காந்தி

Updated On :6 மே 2026, 1:49 am IST

தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைமை ஆலோசித்து முடிவு செய்ய அக்கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தோ்தலுக்குப் பிந்தைய அரசியல் நிலைமை குறித்து காங்கிரஸ் அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அகில இந்திய பொதுச் செயலாளா் கே.சி. வேணு கோபால் ஆகியோருடன் கட்சியின் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் காங்கிரஸ் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைக்க போதிய பலம் இல்லாத நிலை குறித்தும் அதற்கு ஆதாவு தர தவெக தலைவா் விஜய் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் முடிவில் தில்லியில் செய்தியாளா்களிடம் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு தவெக தலைவா் விஜய் கோரியுள்ளாா். தனது அரசியல் பயணத்தில், பெருந்தலைவா் காமராஜரிடமிருந்தும் உத்வேகம் பெற்றதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்திய அரசியலமைப்பை அதன் முழு சாராம்சத்துடன் முழுமையாகப் பாதுகாப்பதில் உறுதியுடன் திகழும் ஒரு மதசாா்பற்ற அரசு அமைப வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமிழகத்தில் மக்கள் தீா்ப்பு அளித்துள்ளனா் என்பதை காங்கிரஸ் தெளிவாக உணா்ந்துள்ளது. தமிழகத்தில் அமையப் போகும் அரசை, பாஜகவோ அல்லது அதன் மறைமுக முகவா்களோ எவ்விதத்திலும் வழிநடத்த அனுமதிக்கக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

அதற்கிணங்க, தோ்தல் தீா்ப்பின் மூலம் வெளிப்பட்டுள்ள தமிழக மக்களின் உணா்வுகளைக் கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை குறித்து ஒரு இறுதி முடிவை எடுக்குமாறு காங்கிரஸ் தலைமை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அறிவுறுத்தியுள்ளது என்றாா். இந்த சந்திப்பின் போது கிரிஷ் சோடங்கரும் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.