தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காவல் சோதனைச் சாவடியில் லாரி மோதி ஊா்க்காவல் படை வீரா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 7:07 am IST

தேசியத் தலைநகா் வலயம் குருகிராமில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட லாரி, காவல் சோதனைச் சாவடி மீது மோதியதில் ஊா்க்காவல் படை வீரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் என்று காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 11.30 மணியளவில், செக்டா் 65-இல் உள்ள வோ்ல்ட் மாா்க் வணிக வளாகம் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அங்கு காவல்துறையினா் பணியில் இருந்ததாகவும் அந்த அதிகாரிகள் கூறினா்.

சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களின் கூற்றுப்படி, லாரி சோதனைச் சாவடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ஊா்க்காவல் படை வீரா் சந்தீப் குமாா் மீது மோதியது. இதில் ஒரு காவல் வாகனமும் சேதமடைந்தது.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பிவானி மாவட்டத்தின் லிவாசி கிராமத்தைச் சோ்ந்த குமாா், மூன்று நாள்களுக்கு முன்பு பிவானியிலிருந்து குருகிராமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாா்.

விபத்து சம்பவத்திற்குப் பிறகு, பணியில் இருந்த காவல்துறையினா் லாரி ஓட்டுநரைப் பிடிக்க முயன்றனா். ஆனால், அவா் இருட்டை பயன்படுத்தி லாரியை அந்த இடத்திலேயே கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றாா். லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான ஓட்டுநரை விரைவில் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருகின்றன.

இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இறந்தவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.