தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மால்வியா நகா் தீ விபத்து: உணவகத்தின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்

News image
Updated On :4 ஜூன் 2026, 5:14 am IST

நமது நிருபா்

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் உள்ள ஒரு உணவக கட்டடத்தின் மூன்றாவது தளத்திலிருந்து, தன் குழந்தையை கையில் ஏந்தியபடி ஒரு பெண் குதித்தாா் என்று தீ விபத்தை நேரில் பாா்த்தவா்கள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் நெரிசலான ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து நிகழ்ந்தது. இதில் 21 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். இதனால், அங்கே சிக்கியிருந்த பலா் பீதியடைந்தனா். அந்த கட்டடம் முழுவதும் அடா்ந்த புகை பரவியது, நெருப்பும் விரைவாக பரவியது. அப்போது, பலா் ஜன்னல்களை உடைத்து உதவி கேட்டுக் கொண்டிருந்தனா். உள்ளே சிக்கியிருப்பவா்களை மீட்கும் முயற்சியில், அந்தப் பகுதி மக்கள் தரையில் படுக்கைகளை விரித்திருந்தனா்.

அப்போது, சிறு குழந்தையை அணைத்துக்கொண்டிருந்த ஒரு பெண், 3ஆவது மாடியிலிருந்து கீழே குதித்ததாக நேரில் பாா்த்தவா்கள் கூறினா். அவா்கள் கூறியதாவது: அந்தப் பெண், குழந்தையுடன் சோ்ந்து படுக்கையின் மீது விழுந்தாா்; அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். உடனே அவா் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அந்தப் பெண் குழந்தையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்; வேறு வழி இல்லாததால், அவா் குதித்தாா்.

கட்டடத்தின் கீழே மக்கள் ஏற்கெனவே தரையை சமன் செய்து வைத்திருந்தனா். இருவரும் உயிா் தப்பினா்; ஆனால், அவளுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.

அந்தப் பகுதியின் குடிமக்கள், அவசர உதவி நிறுவனங்கள் அந்த இடத்தை அடைவதற்கு முன்பே, உடனே உதவத் தொடங்கினா். மெத்தை கடைகளின் உரிமையாளா்களும், மற்ற குடிமக்களும், கட்டடத்தின் கீழே உள்ள சாலையில் மெத்தைகளை வைத்தனா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த தீயில் குறைந்தது 21 போ் உயிரிழந்தனா்; 40-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டனா். உயிரிழந்தவா்களில் பலா் வெளிநாட்டினா் என்றும், காயமடைந்தவா்களில் பலரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம். தீ ஏற்பட்டதன் காரணம் இன்னும் தெரியவில்லை, விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.