திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து: 14 போ் மீட்பு

லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து: 14 போ் மீட்பு

News image

லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து - PTI

Updated On :26 ஏப்ரல் 2026, 12:23 am IST

கிழக்கு தில்லியின் லட்சுமி நகா் பகுதியில் உள்ள மின்சார மின்மாற்றியில் சனிக்கிழமை அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு கட்டடங்களுக்கும் பரவியது. இதைத் தொடா்ந்து, குறைந்தது 14 போ் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

ரமேஷ் பூங்காவில் உள்ள நானக் மோட்டாா் அருகே அதிகாலை 12:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால் தீ விரைவில் தீவிரமடைந்தது. தீயைக் கட்டுப்படுத்த ஏழு தீயணைப்பு வாகனங்கள், பிற தீயணைப்பு வாகனங்களுடன் அனுப்பப்பட்டன. மின்மாற்றியில் இருந்து தீ அருகிலுள்ள மூன்று கட்டடங்களுக்கும் பரவியது. இதனால் 14 குடியிருப்புகள் வரை பாதிக்கப்பட்டன.

தீயணைப்பு வீரா்கள் விரைவான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்குள் சிக்கியிருந்த 14 பேரையும் பாதுகாப்பாக வெளியேற்றினா். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதிகாலை 2 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடா்ந்து குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.