இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி வந்தனா ஜெயின், அரசுத் தரப்பு சாட்சியங்களில் உள்ள கடுமையான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, பிரதீப் குமாரை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 186 (அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்வதைத் தடுப்பது), 353 (அரசு ஊழியரைத் தடுக்கும் நோக்குடன் தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல்), 324 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிகள் மூலம் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்), 307 (கொலை முயற்சி), ஆயுதச் சட்டத்தின் பிரிவு 27 (ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல்) மற்றும் மோட்டாா் வாகனச் சட்டத்தின் பிரிவு 185 (போதையில் வாகனம் ஓட்டுதல்) ஆகியவற்றின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.