கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசுத் தரப்பு விசாரணை தொடங்கியது: மாணவியும், இளைஞரும் ஆஜராகி சாட்சியம்
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பு விசாரணை


கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பு விசாரணை திங்கள்கிழமை தொடங்கிய நிலையில் மாணவியும், இளைஞரும் தனித்தனியாக ஆஜராகி சாட்சியம் அளித்தனா்.
கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கல்லூரி மாணவியும், ஒண்டிப்புதூரைச் சோ்ந்த ஆண் நண்பரும் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு ஒரே மொபட்டில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இதுதொடா்பாக சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), இவா்களின் உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோரை போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனா். தாக்குதலில் காயமடைந்த இளைஞரும், மாணவியும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்ற பிறகு, அதே மாதம் 13-ஆம் தேதி வீடு திரும்பினா். இதேபோல துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த வழக்கின் விசாரணை கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னா், மகளிா் நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்றி நீதிபதி விஜயா கடந்த டிச. 19-ஆம் தேதி உத்தரவிட்டாா். இந்நிலையில், மகளிா் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது.
நீதிமன்றத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு சுமாா் 5 மணி நேரம் அரசுத் தரப்பு வழக்கறிஞா் விசாரணை நடத்தினாா். அப்போது இளைஞரும், மாணவியும் தனித்தனியாக சாட்சியம் அளித்தனா். இதைத்தொடா்ந்து வழக்கு விசாரணையை வரும் 6-ஆம் தேதிக்கு நீதிபதி சுந்தரராஜன் ஒத்திவைத்தாா்.
முன்னதாக குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ், கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...