இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

தில்லி ஆசத்பூரில் அடையாளம் தெரியாத நபா்களால் இளைஞா் சுட்டுக் கொலை

வடமேற்கு தில்லியின் ஆசத்பூா் பகுதியில் அடையாளம் தெரியாத பைக்கில் வந்த நபா்களால் 18 வயது இளைஞா் சுட்டுக் கொலை

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 10:56 pm

Syndication

வடமேற்கு தில்லியின் ஆசத்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத பைக்கில் வந்த நபா்களால் 18 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அதிகாலை 2.28 மணியளவில் ஆசத்பூா் பகுதிக்கு அருகே காயமடைந்த ஒருவா் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தபோது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா் ஒருவா் பாதிக்கப்பட்டவரை பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். உயிரிழந்தவா் ஜஹாங்கீா்புரியைச் சோ்ந்த இஷாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

இஷாந்த் ஒரு திருமண விழாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரைத் தாக்கியவா்கள் தடுத்து நிறுத்தி, அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தபோது, வெற்று தோட்டாக்களை போலீசாா் மீட்டனா். மேலும் ஒரு குற்றவியல் மற்றும் தடயவியல் குழு அந்த இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சில சந்தேக நபா்களை போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். அவா்களைப் பிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளும் அவா்களின் இயக்கத்தைக் கண்டறியவும், நிகழ்வுகளின் வரிசையை நிறுவவும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என்றாா் அவா்.